Friday, June 03, 2005

சரியான தீர்ப்பு...

கொஞ்சம் அதிகப்படியாக...
- ராகவ் -

‘‘ப்ளிஸ் ஜெயந்தி, கோபப்படாம நான் சொல்றத கேளு’’ சொன்ன சுரேஷ்ஸின் வார்த்தையை மதிக்காமல் பேசினாள் ஜெயந்தி. முகத்தில் நிறைய கோபம் வைத்திருந்தாள்.

‘‘கேட்கமாட்டேன், இந்த ஒரே ஒரு தடவை என் பேச்சுக்கு மதிப்பு கொடுங்க சுரேஷ். இப்ப என்னோட எங்க வீட்டுக்கு நீங்க வரணும் வர்றிங்க.’’

‘‘என்ன ஜெயந்தி நீ. நான் சொல்றது புரிஞ்சுக்காம சின்ன குழந்தையாட்டம் அடம்பிடிக்கிற. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு உன்னோட வரணும்கிறியே? முடியுமா? ப்ளிஸ் ஜெயந்தி, நீ இப்ப வீட்டுக்கு போ. நாளைக்கு நிச்சயமா, தவறாம உங்க அப்பாவ வந்து சந்திக்கிறேன்’’.

‘‘சுரேஷ் உங்களுக்கு எத்தனையோ அவசரமான வேலை இருக்கலாம். ஆனா அதவிட அவசரமானது, முக்கியமானது என் விஷயம் ஏன்னா...? நம்ம காதல் விஷயமும், நான் கர்ப்பமா இருக்கிற விஷயமும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போயிட்டு அரிவாள் எடுத்து வெட்ட வந்திட்டாரு. சுரேஷ் நல்லவர், ஏமாத்த மாட்டாருன்னு சொல்லி சமாதானப்படுத்தி, உங்களை அழைச்சிட்டு வர்றதா சொல்லி வந்திருக்கேன். நீங்க இல்லாம நான் தனியா வீட்டுக்கு போனா, அப்புறம் என்னை உயிரோட பார்க்க முடியாது. நீங்களும் நாளைக்கு வரமாட்டிங்க முரண்டு பிடிக்காம இப்பவே வாங்க’’ பிடிவாதமாக பேசினால் ஜெயந்தி.

‘‘உங்க அப்பாவ பார்த்து நான் என்ன சொல்லணுங்-கிற?’’ இவ்வளவு சொல்லியும், கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே என்ற எரிச்சலில் கேட்டாள்.

‘‘என்ன சுரேஷ், இவ்வளவு விளக்கமா என்னோட சூழ்நிலையை எடுத்து சொன்ன பிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்கிறிங்க. எங்க அப்பாவ பார்த்து, அவர் சமாதானம் அடையற மாதிரி சில வார்த்தைகள் ஜெயந்தியோட காதலன் நான்தான். ஏதோ ஒரு வேகத்தில தப்பு பண்ணிட்டோம். பலனா வளர்ற குழந்-தைக்கு நான்தான் தகப்பன். அப்படின்னு அவர் திருப்தி அடையற மாதிரி சில வார்த்தைகள் நீங்க சொல்லணும். அவ்வளவுதான்’’

‘‘அதாவது பொய் சொல்லணுங்கிற?’’

‘‘சுரேஷ்...’’ அதிர்ந்தாள்.

‘‘ஜெயந்தி, நான் உன்னோடு பழகினது, உன் சிவப்பு உடம்புக்காகதான். மத்தபடி உன்னை கல்யாணம் பண்ணிக்கணுங்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடை-யாது. வேணுன்னா சொல்லு, நான் சொல்ல வேண்டிய வசனத்தை வேற எவனையாவது சொல்ல சொல்றேன். என்ன?’’ அவனின் அலட்சியமான பேச்சு ஜெயந்திக்கு இன்னும் அதிர்ச்சியை தர ஏற்பட்ட கோபத்தை, ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாக பேசினாள்.

‘‘நீங்க அப்படி பழகி இருக்கலாம் சுரேஷ். ஆனா நான் அப்படி பழகல உங்க மேல உயிரையே வச்சிருக்-கேன். சகலமும் நீங்கதான்னு உங்கள பத்தி ரொம்ப உயர்வா நினைச்சுகிட்டு இருக்கேன். அதனாலதான் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில மாட்டிகிட்டு தவிச்சுகிட்டு இருக்கேன். தயவு செய்து உங்க மனச மாத்திகிட்டு, என்னோட வந்து எங்க மானத்த காப்பத்துங்க. நீங்க வரலையின்னா...? நான், அப்பா, அம்மா மூணு பேரும் தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழியில்லை’’ கெஞ்சியபடியே பேசினாள் ஜெயந்தி.

‘‘ஜெயந்தி நீ ரொம்ப எதிர்பார்க்கிற அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. நான் பழகின பெண்களிலேயே அதிக நாள் பழகினது உன்னோடதான். இதில விசே-ஷம் என்ன தெரியுமா..? இன்னும் கூட நீ அலுக்கல. அந்த அளவுக்கு நீ என்னை பாதிச்சிருக்க. அதனால-தான் என்னோட பொன்னான நேரம் வீணா போறத பத்தி கூட கவலைப்படாம உன்னோட அத்தனை கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னேன். எனக்கு இந்த கல்யாணம்ன்னாலே அலர்ஜி. காரணம் அது ஒரு ஆணோட சுதந்திரத்தை கட்டுபடுத்தற விஷயம். அதனால கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்-தாத நடந்தது நடந்திட்டு. அதுக்காக தற்கொலை முடிவுக்கு போறது முட்டாள்தனம். சின்னதா ஒரு அபார்ஷன் செய்துக்க. எல்லாம் சரியாயிடும், இதுக்கு போயி...’’ பேசிக் கொண்டே வாசலுக்கு பார்வையை ஓடவிட்டவன் அதிர்ந்தான். வாசலில் வக்கீல் ஒருவரு-டன் சுரேஷ்ஸின் அப்பா நின்றிருந்தார். பார்வையில் தீ இருந்தாலும் கிண்டலுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘உன்னை என்னோட மகன்னு சொல்லிக்கிறதுக்கு நான் ரொம்பவும் பெருமைபடுறேன். எப்படிடா இது மாதிரி திறமையான காரியங்கள உன்னால செய்ய முடியுது?’’

‘‘அப்பா இவ சொல்றத நம்பாதீங்க. எல்லாம் பொய், என்கிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்காக இப்படி ஒரு பொய் சொல்றா’’ யாருக்கு தெரியக் கூடாது என்று நினைத்தோமோ, அவருக்கு தெரிந்து விட்டதே என்ற படபடப்பில் பேச ஆரம்பித்த சுரேஷ்ஷை சட்டென்று அடக்கிவிட்டு பேசினார்.

‘‘நீ சொல்றத நம்பி இருப்போம். நீங்க பேசினத கேட்காம இருந்திருந்தா... நாங்க இங்க வந்தது. நீ செய்த தப்ப நியாயப்படுத்த சொல்லப் போற பொய்ய கேட்கிறதுக்கு இல்ல. நியாயமான தீர்ப்பு வழங்குகிறதுக்குதான். அதனால, நீ இப்ப எங்களோட ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து, உன்னால் பாதிக்கப்பட்ட இவள, உன் மனைவியா ஆக்கிக்கிற... என்ன...?’’

‘‘என்னப்பா நீங்க. நம்மளோட வசதியை யோசிக்காம பேசுறீங்க. கல்யாணத்தையே வெறுக்கிறவன் நான். என்னைப் போய் கல்யாணம் செய்துக்க சொல்லி... அதுவும் இவள வேணாம்ப்பா சத்தியமா என்னாள இவள கல்யாணம் செய்துக்க முடியாது. எதாவது அளெண்ட் கொடுத்து செட்டில் பண்ணிடுங்க’’ மிகவும் அலட்சியமாக பேசினான்.

‘‘செட்டில் செய்யணுமா...? ரொம்ப சாதரணமா சொல்ற... அது சரி... எவ்வளவு கொடுக்கப் போற... அத எப்படி கொடுக்கப் போற...?’’

‘‘என்னப்பா இப்படி கேட்கறிங்க. எவ்வளவு தொகைங்கிறது அவளோட விருப்பத்த பொறுத்தது. அந்த தொகையை நீங்கதான் கொடுக்கணும்’’

அவன் அப்படி சொல்லி முடித்ததும், அட்டகாச-மான சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தார் சுரேஷ்ஷின் அப்பா.

‘‘எந்த உரிமையில நான் பணம் கொடுக்கணும்னு சொல்றியோ... அது அப்படியே நிலைக்கணும்னா... நான் சொல்றபடி கேட்கணும்...’’

‘‘புரியலைப்பா நீங்க சொல்றது.’’

‘‘அப்படியா... சரி தெளிவாவே சொல்லிடுறேன். நீ இவள மனைவியா ஒத்துக்கலையின்னா... என்னோட சொத்துக்கு நீ வாரிசா இருக்க முடியாது. அதுக்காகதான் வக்கீலையும் கையோட அழைச்சிட்டு வந்திருக்கேன் யோசிச்சு சொல்லு...’’

சுரேஷ் அதிர்ந்தான். இப்படியரு எதிர்பார்க்காத திருப்பம் ஏற்படுமென்று எதிர்பார்க்காததால்.

யோசித்தான் அப்பா சொல்வதை செய்யக்கூடியவர். சொத்தை இழந்து பராரியாக திரிவதைவிட, இணங்குவது போல் நடிப்பதுதான் தற்சமயத்திற்கு சிறந்தது. ஜெயந்தி ஒரு தூசு. அவளை தவிர்ப்பது சுலபம். மனதுக்குள் கணக்கு போட்டுவிட்டு... மெதுவாக சொன்னான்.

‘‘சரிப்பா... உங்க விருப்பத்துக்காக சம்மதிச்சு, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்.’’

‘‘என்னம்மா... உனக்கு சம்மதம்தானே...?’’ மகள் ஒத்துக் கொண்ட சந்தோஷத்தில் ஜெயந்தியிடம் கேட்டார்.

‘‘சார் எனக்காக, நான் சொன்னத நம்பி இந்த அளவுக்கு முயற்சி எடுத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆனா இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு, என்னால சந்தோசப் பட முடியல சார். இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்ச காரணம்... உங்க மேல உள்ள மதிப்போ, என் மீது உள்ள காதலோ கிடையாது. நீங்க சேர்த்து வைச்சிருக்கிற அந்த ஏராளமான சொத்துதான். ஏதோ சொல்லுவாங்கல்ல, பத்து பேர் சேர்ந்து குதிரையை தண்ணி தொட்டிக்கிட்ட கொண்டு போகலாம். ஆனா எத்தனை பேர் சேர்ந்தாலும் அத தண்ணி குடிக்க வைக்க முடியாது. அது மாதிரிதான் இவரு கதையும்.

சொத்துக்காக கல்யாணம் செய்துக்கறவரு... என்னோட அன்பா... காதலா வாழ்க்கையை நடத்த-மாட்டாரு இப்ப எப்படி இருக்கிறாரோ... அப்படி-யேதான் பிளேபாய் மாதிரி இருப்பாரு. எந்தப் பொண்ணை ஏமாத்தலாம்ன்னு எதிர்பார்த்துகிட்டு. அத-னால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். அதுக்காக என்னை நீங்க மன்னிச்சுடுங்க’’ சொல்லிக் கொண்டே தன் பர்ஸை திறந்தாள். சிறிய பாட்டிலை எடுத்தாள்.

மூவரும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுரேஷ் அலறிக் கொண்டே விழுந்து துடிக்க ஆரம்பித்தாள்.

‘‘என்னாச்சு...’’ பதறினார்கள் இருவரும்.

ஜெயந்தி மிகவும் அமைதியாக பேசினாள்.

‘‘பயப்படாதீங்க. உயிருக்கு ஆபத்தில்ல. இவரு ஆட்டம் போட காரணம் அழகு. அத அசிங்கப்-படுத்திட்டா? அடங்கிகிடப்பாருல்ல. அதான் ஆசிட் ஊத்திட்டேன். இனிமேல் எனக்கு மட்டுமே சொந்தமா இருப்பாரு’’ என்றபடியே அருகில் இருந்த தொலைபேசி மூலம், புகழ் பெற்ற மருத்துவமனையின் மருத்துவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்தாள்.

- ராகவ் -
Quelle-Yarlmanam