கமலாதாஸ்
தமிழில் - க.லல்லி
கடந்த வருடம்தான் பெருநகரங்களில் வாழ்வதை விட்டு கேரளாவில் குடியேறுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய கலைப்படைப்புகளின் புகழ் அதிகரித்த காலத்தில் என்னுடைய விரல்கள் திறமையை இழக்க ஆரம்பிப்பதால் சில வேளைகளில் நினைத்தேன், அனுபவ வறட்சி அதன் பின்புலமாக இருந்திருக்கக்கூடும். இதனைத் தொடர்ந்து என்னுடைய சிற்பங்கள் ஒரே மாதி¡¢யாக உருவெடுத்தன. கலை வாழ்வை பிரதிபலிக்கலாம். தவறில்லை. ஆனால் மாற்றமின்றி தொடர்ந்தால்?
நகரங்களில் எனக்கு மாடலாக வந்தவர்கள் ஆன்மவறட்சியுடைய நகர்ப்புற படைப்புகளாயிருந்தார்கள். வெளிநில முகமும் தூசுபடிந்த தலையுமாய் காணப்பட்டார்கள். நனைந்த பஞ்சு போல அவர்களது தசைகள் தொளதொளத்து இருந்தன. அவர்கள் அடிவயிற்றில் இருந்த கட்டிகளையும் அறுவைசிகிச்சை தழும்புகளையும் புடைத்திருக்கும் நரம்புகளையும் ஒருவித சங்கடத்துடன் கவனித்தேன். ஓய்வு நேரத்தில் கருகில உதடுகளுக்கிடையே சிகரெட்டை பற்ற வைத்தார்கள். பூரியையும் உருளைக்கிழங்கையும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். என்னுடைய கழிவறையில் பெரும் ஓசையுடன் மலஜலம் கழித்தார்கள். அவர்களுடைய வேகமான அசைவுகள் என்னையும் பீடித்தன. பேரூந்துகளிலும் மின்சார ரயிலிலும் செல்லும் பயணிகளின் பொறுமையின்மை அவர்களிடம் காணப்பட்டது.
எப்போதும் எனது நேரம் நிதானமாக கழிவதையே விரும்பினேன். மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் வித்து போல பொறுமையை என்னுள் வளர்த்து வைத்திருந்தேன். ஒரு செடி செழித்து மரமாக வளர்வதைப் போல எனது சிற்பங்கள் நின்று நிதானித்து உருவெடுத்தன. மேற்கூரையில்லாத வராந்தாக்களில் வேலை செய்தேன். நான் உத்தேசிக்காமலேயே எனது சிற்பங்கள் அனல் பறக்கும் வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் உருமாறின. இயற்கை அவற்றைத் தொட்டுத் தடவி ஒளிர்ந்திடச் செய்தது. அதனாலோ என்னவோ பலரும் அவற்றிற்கு உயிர் இருப்பதாகக் கூறினர். மாடல்களிடமிருந்த அந்த உயிர்ப்பை சிற்பங்கள் இவ்வாறாகப் பெற முடிந்தது. என்னுடைய சிற்பங்கள் நிறைய விற்பனையாகி வருவாய் அதிகா¢த்தது. கலையுணர்வு அற்றவர்கள் நான் நிர்வாண உடல்களைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்குவது குறித்து அவதூறுகள் பரப்பினர். இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றவர்கள் மனநோய் பீடித்தவர்கள் என்றும் அவர்களின் விஷம் தோய்ந்த இதழ்கள் இத்தகைய அருவருப்பிற்கு பழகிப்போனவை என்றும் கூறி அவர்களைப்பற்றி அறிய வைத்தார் என் கணவர். அதன் பின்னர் அவர்களது வசைச் சொற்களுக்காய் என் கண்ணீரை நான் வீணாக்கியதில்லை.
என் கணவர் தனது நாற்பத்தி மூன்றாம் வயதில் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூன்று மாதகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. அவரது வலது காலும் கையும் முற்றிலும் செயலற்றுப் போனது. சில காலம் அவருடைய பேச்சுப் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. எனது காலை முழு நேரத் தொழிலானது. படிப்படியாக ஊன்றுகோலுடன் வீட்டில் நடக்கவும் பேசவும் அவருக்குத் தெம்பு வந்தது. ஆனால் அந்த நிலை வந்தபோது அவருக்கு வேலை பறிபோயிருந்தது. நான் ஓய்வின்றி சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கும்போது என்னருகில் சாய்ந்தவாறு ஊன்றுகோலில் கையூன்றி மெலிதான குரலில் 'வாதநோய்காரனுக்கு வாழ்க்கைப்பட என்ன தலையெழுத்து உனக்கு. பாவம். துரதிருஷ்டமானவள் நீ' என்று கூறுவார்.
அந்தக் குரலில் இருந்த அனுதாபம் எனக்கு வேண்டியதாயில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்கு முன்னர் காமவிகாரம் படைத்த என் கணவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போலிருந்தேன். முழமையாய் என் உடலை அர்ப்பணிப்பதன் மூலமே அவரை நான் திருப்திப்படுத்த முடிந்தது. அவருடைய இடத்தில் ஒருவேளை நான் வாதநோயில் படுத்திருந்தால் ஒரு வருடத்திற்கு மேல் அவரால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. படுக்கையறையில் கடமையாற்ற முடியாத மனைவியை அவர் கவனித்திருக்க மாட்டார். காம உணர்வுகளுக்கு அவர் அளித்த அந்த முக்கியத்துவம் எனக்கு அச்சமூட்டியது. இதன் காரணமாகவோ என்னவோ இப்போது அவரைக் கவனித்துக் கொள்வது இரகசிய சந்தோஷத்தை அளித்தது. இந்நிலையில் எனக்கு அவநம்பிக்கைக்கு¡¢யவராய் இருக்கமாட்டார் என்ற எண்ணமே தெம்பளித்தது. ஒரு நாள் என்னிடம் 'நீ இப்போதெல்லாம் கண்ணாடியில் உன்னைப் பார்த்துக் கொள்வதில்லையா?' என்று கேட்டார்.
'எனக்குத் தொடர்ந்து வேலைகள். கண்ணாடியில் முகத் பார்த்து பூரிப்பதற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு எங்கு நேரம்?' என்றேன்.
'இந்நாட்களில் நீ மிகவும் அழகு வாய்ந்தவளாகிவிட்டால், அழகு சாதனங்களின் உதவியின்றியே உன் அழகு சுடர்விடுகின்றது. கண்டிப்பாக உன்னை நீ கண்ணாடியில் பார்க்க வேண்டும்' என்றார்.
எவ்வித பொறுப்புமற்ற சுபபோகத்தில் திளைத்த பழைய நாட்களில் இவர் என் அழகைப் புகழ்ந்து பேசுகையில் அளவிடமுடியாத சந்தோஷமாயிருக்கும். ஒரு விளையாட்டுப் பொருளுக்கு அந்தப் புகழ்ச்சி தேவையானதுதான். அது நம் சார்புத் தன்மையை மறப்பதற்கு பொ¢தும் உதவும். பொருளாதார ரீதியில் கணவனையும் உறவினரையும் வீட்டு வேலையாட்களையும் பொறுப்பேற்றிருக்கும் மனைவிக்கு இத்தகைய புகழ்ச்சி தேவையில்லை என்பதை படிப்படியாக உணர்ந்தேன். என்னை அழகுப் பதுமையாக்கி அவரை சந்தோஷப்படுத்தும் அவசியம் இப்போது எனக்கில்லை. நான் அடிமையல்ல. சுதந்தரமானவள். தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் பரம்பரைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டவள் என்று கர்வத்துடன் நினைத்துக் கொண்டேன்.
ஆயள்வேத சிகிச்சைக்காக என் கணவரை கேரளாவிற்கு அழைத்துச் செல்லுமாறு என் நண்பர்கள் ஆலோசனை கூறினர். எங்களது இடமாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். நகரின் எல்லை தாண்டி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த 'நாலுக்கட்டு' வீட்டினை ஒரு தரகன் என்னிடம் காண்பித்தான். பழைய வீடாக இருப்பதால் வாடகை மிகவும் குறைவு என்றான். அந்த வீட்டுச் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் பாசி படர்ந்திருந்தது. அந்த இரும்புகேட் துருப்பிடித்து பலவிடங்களில் கிராதி விட்டுப் போயிருந்தது. சுவர்களுக்கு பின்புறம் பயன்படுத்தப்படாத பாழ்நிலங்களில் காட்டுச் செடிகளும் கொடிகளும் படர்ந்து கிடந்தன. அதற்கப்பால் நீலக்கடல் விரிந்து கிடந்தது. நீரில் சூரியஒளி படுவதாலோ என்னவோ கடலுக்கு மேலிருந்த வானம் விநோத வெண்மையில் ஒளிர்ந்தது. அந்தத் தருணத்தில் கடலையும் மேகங்களையும் வானத்தையும் பார்த்தபின்பு தரகனிடம் 'வேறு ஒரு வீட்டைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை' என்றேன்.
கதவைத் திறந்து இருள் அடர்ந்த அந்த வீட்டிற்குள் நுழைகையில் வெளவால்களின் எச்சமும் எலிப் புழுக்கைகளின் வீச்சமும் கூடிய ர்நாற்றம் வீசியது. வீஇட்டுக் கதவுகளிலும் சன்னல்களிலும் படிந்திருந்த தூசியைத் துடைத்துக் கொண்டே வீட்டுத் தரகன்,
"அண்டை அயலவர்கள் இந்த வீட்டைப் பற்றி நிறையப் பொய்கள் சொல்வார்கள். பொறாமை பிடித்தவர்கள். இந்த வீட்டில் யாரோ ஒருவனை அடித்துக் கொலை செய்ததாகக்கூட கூறுவார்கள். இங்கு வாடகைக்கு வருபவர்களை விரட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அவை" என்றான். சன்னல்கள் மிகவும் சிறியதாயிருந்தன. நடுமுற்றத்திலிருந்து பார்க்கும்போது நீண்ட உருண்ட தூண்களும் கடப்பைக்கல் தளம் பாவியிருந்த முற்றமும் தொ¢ந்தன. தென்வடல் திசையிலும் கீழ்மேலும் காற்று நுழைந்து செல்வதற்கான வழிகளுடன் வீடு அமைந்திருந்தது. உள்முற்றத்தின் ஓரங்களில் எனது சிற்பங்களை நிறுவத் தீர்மானித்தேன். சிற்பங்களில் வேலை பார்க்கும் போது நிறைய காற்றும் வெளிச்சமும் அங்கு கிடைக்கும்.
தரகனிடம், "இந்த வீடு எனக்குப் பொருந்தும்" என்றேன்.
என் கணவர், "கழிவறைகளை நீ பார்க்க விரும்பவில்லையா?" என்றார். நான் தலையாட்டினேன்.
"இப்போது எதனையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை".
இத்தனை காலம் எனக்காய்த் தனிமையில் கனவுகளுடன் காத்திருந்த வீடு இறுதியில் என்னுடையதாயிற்று. அதன் கனவுகள் மட்டுமே அந்த பழைய வீட்டை நிலைகுலையாமல் பாதுகாத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வெகுகாலத்திற்கு முன்பே காற்றும் மழையும் அதன் கூரைகளையும் உத்திரங்களையும் தூண்களையும் சூறையாடியிருந்திருக்கலாம்.
நானும் பலவருடங்களாக எனது மனத்தோற்றத்தில் இம்மாதி¡¢யான வீட்டினை கனவு கண்டு வந்திருக்கிறேன். அதன் துரப்பிடித்திருந்த கேட்டும் முட்புதர்கள் நிறைந்த பாழ்நிலமும் அதனைத் தாண்டி கரையை முட்டி மோதிக் கொண்டிருக்கம் அலைகளும் எனது கனவுகளில் திரும்பத் திரும்ப வந்திருக்கின்றன. அதன் தலைவாசலையும் சன்னல்களையும் நடுமுற்றத்தையும் தூண்களையும் கடப்பைக்கல் தரையையும் பாசி படர்ந்த மேற்கூரையையும் வெளவால்கள் படபடக்கும் பரண்களையும் எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன்.
என் கணவருக்கு மூலிகைத் தைலங்களை உடலில் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கு ஒரு கிழவனை நியமித்தேன். வீட்டு வேலைகளையும் சமையலையும் செய்வதற்கு ஒரு கிழவி வந்து சேர்ந்தாள். முதல் சில மாதங்கள் மகிழ்ச்சியுடன் கழிந்தன.
ஒரு கிராமத்துப் பெண்ணும் எனக்கு மாடலாக கிடைத்தாள். அவள் பெயர் ஸ்ரீதேவி. புதினேழு வயது கூட நிரம்பாதவள். ஆரம்பத்தில் மிகவும் கூச்சமும் தயக்கமும் நிறைந்தவளாயிருந்தாள். பின்னர் பெருமிதத்துடனே தனது நிர்வாணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அவளை நிற்க, உட்கார, படுக்க வைத்து நிறைய சிற்பங்களை உருவாக்கினேன். அவளுடைய உயிர்ப்பின் இரத்தத்தையெல்லாம் உறிஞ்சியதாலோ என்னவோ எனது உருவங்களில் அபூர்வ ஜீவன் ததும்பிற்று. அவள் உயிரற்ற பொம்மை போல சரிந்து விழுகையில் அவளின் பிரதிமைகளோ புத்துயிர்ப்புடன் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். வெயிலின் வெம்மை படுவதாலோ என்னவோ மனித உடம்பின் உஷ்ணமும் அந்தக் கல்லிலும் மரத்திலும் சூடு இருந்தது. ஒரு நாள் எனது கணவர் அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து "போதும் நிறுத்து. இனியும் அவளால் தாங்க முடியாது" என்றார்.
அவர் முகத்தில் கோபம் தெறித்தது. நேரடியாக என்னிடம் காட்டிய கோபம் எனக்குத் திகைப்பூட்டியது. இதுவரையிலும் எனது சிற்பக்கூடத்திற்குள் நுழைந்திராதவர் இப்போது சிலைகள் உருவாக்க வேண்டாமென்று உத்தரவிடுகின்றார்.
அந்தப் பெண் கடப்பைக்கல் தரையில் இடதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன.
"அவள் நன்றாகத்தானிருக்கிறாள்" என்றேன்.
"ஒருவேளை இருக்கலாம். ஆனால் இவ்வாறு தொடர்ந்தால் நிச்சயம் அவள் இறந்து போவாள். நீ இரத்தக் காட்டேறி போல அவள் ரத்தத்தை உறிஞ்சுகிறாய். உன்னுடைய சிற்பங்கள் உனது மாடல்களின் உயிரைத் திருடுகின்றன".
அந்தப் பெண்ணின் முகத்தை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தேன். வெளிறிய அழகிய முகம். நீராம்பல் போன்ற கன்னங்கள். நீண்ட புருவங்களுடைய கண்கள்.
"அவள் அழகானவள் என்ற நினைக்கின்றீர்களா?" என்று அவரிடம் கேட்டேன்.
"எனது கருத்துக்கு இங்கு இடமில்லை" என்று முணுமுணுத்தார். ஸ்ரீதேவி - சதைப்பற்று இல்லாத மெலிந்த இந்த அழகிய பெண்ணின் உடல் மீதான அவர் பார்வை என்னவாயிருக்கும் என்று அறிய முயன்றேன். பறித்துப் போடப்பட்ட பலாக்கிளை போல் படர்ந்திருந்த அவள் உடலின் ஏற்ற இறக்கங்களை கல்லில் வளைவுகளாக என்னால் உருமாற்ற முடிந்தது. ஒவ்வொரு சிலையை முடிக்குந் தறுவாயிலும் அவள் அதிக களைப்பினால் சரிந்து விடுவாள். ஒரு வனவிலங்கின் அயர்ச்சி போன்றிருந்தது அது. நான் ஆறு துருவங்களை முடித்த பின்னர் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்ற அதீத அயர்ச்சி அவளிடத்து காணப்பட்டது. ஒருமுறை கண்கள் பாதி மூடிய நிலையில்
"அம்மா எனக்குக் களைப்பாயிருக்கிறது. போக விடுங்கள்" என்றாள்.
அவளுக்குச் சூடான பால் தந்தேன். அவள் உடலை வாசனைத் தைலம் தேய்த்து நன்கு பிடித்து விட்டேன்.
நான் ஸ்ரீதேவியை மிகவும் நேசித்தேன். ஒரு சிற்பி தன்னுடைய மாடலாக பணிபுரிபவர்களிடத்து காட்டும் நேசந்தான் அது. அவளைக் கொண்டு நான் சிற்பங்களை வடித்த பின்பு எனது அன்பு திடீரென்று மறைந்து விடுமா என்று என் கணவர் கேட்டபோது பதில் பேசாமலிருந்தேன். அதற்கானத் ¨தா¢யம் எனக்கில்லை. உணர்வுகளின் வறட்சியை ஒளிவுமறைவின்றிக் காட்ட என்னால். இயலவில்லை. உணவுக்கும் உடைக்குமாய் என்னை முழுவதுமாய் சார்ந்திருக்கும் அவருக்கு என் மீதுள்ள மா¢யாதை குறைந்துவிடும் என்ற பயத்தாலோ என்னவோ நான் ஏதும் பேசவில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்றவள் என்ற முறையில் அவர் என்னைச் சார்ந்தருப்பதை உள்ளுர சலித்தேன். அதே நேரம் இந்நிலை தொடர்வதையே விரும்பினேன். ஆடம்பரமாகவும் எதிர்காலம் பற்றிய கவலைகளுமற்று இருக்கும் போதுதான் நான் அவருக்கு அவசியமானவள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர் மூட்டைப்பூச்சி போல் என் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு. அவர் பணியிலிருந்த காலத்தில் என் மீது அன்பும் மதிப்பம் வைத்திருந்ததாக நடித்தது கூட இல்லை.
எப்படி நான் அந்த சாப இரவில் எழுந்தேன்? சிறு தூறல் ஜன்னலில் தெறிக்கும் சப்தம் தவிர வேறு எந்த சப்தங்களற்ற அந்த இரவில் எப்படி எனக்கு விழிப்பு வந்தது? இயல்பற்ற அமானுஷ்ய அமைதி என்னுள் ஊடுருவிற்று. அமைதி நம்மை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்புமா? நான் கையில் டார்ச்சுடன் எனது கணவரை ஒவ்வொரு அறையாய்த் தேடினேன். நிலவொளியில் சமையலறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் என் கணவர் ஸ்ரீதேவியைத் தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டேன். வேதனை தகிக்கும் உயிர்களின் முகபாவங்களையும் உடல் விறைப்பையும் வெளிப்படுத்திய அவர்கள் பந்தயக் குதிரைகள் பந்தயத்தின் முடிவில் காணப்படுவது போல் இருந்தனர். அந்த ஒரு கணம், பின் வராந்தாவை விட்டு ஓடினேன். ஒரு தொன்மையான சடங்கை சந்தர்ப்பவசத்தால் காண நேர்ந்ததைப் போன்று உணர்ந்தேன்.
அதன் பினன்ர் அரைமணி நேரம் கூட அங்கு நான் தங்கவில்லை. அந்த இடத்திற்கு அந்நியமானவளாகிவிட்டேனா? கரையோரத்தில் நடக்கும் என்னைப் பொ¢ய அலையொன்று கடலுக்குள் மூழ்கடித்திருக்கும் என்று அவர் கருதலாம். அடுத்த மாத வாடகையைக் கூட கொடுக்க முடியாத அவர் தன் துரதிருஷ்டத்திற்கும் காரணமான அந்த பெண்ணை வெறுக்கலாம். அவள் அழகு திடீரென்று ஊனமாகவும் மாறக்கூடும்.
கீழ்த்திசையில் சில ஒளிக்கீற்றுக்கள் தோன்றியிருந்தாலும் அந்த கடற்கரையில் இருள் அடர்ந்திருந்தது. அந்த இருள் புகைந்து கொண்டிருக்கும் மயானத்து சாம்பலின் நிறமாயிருந்தது. சிற்பங்களை உருவாக்கப் பயன்படும் கணிமண்ணின் எண்ணற்ற வெறிநாய்களின் முகங்களாக கொந்தளிக்கும் அரபிக் கடலோரம் நான் நடந்து கொண்டிருந்த போது நூற்றைம்பது வருட காலத்து அரூத வீடு எனக்கு அமைதியாக இறுதி விடை கொடுத்திருக்குமா?
அந்த வீட்டைத் தவிர வேறு யாரிடத்தும் அந்தக் கணத்தில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. என்னுடைய வாழ்வு ஒரு கனவென்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இந்த ஓட்டம் மட்டுமே நிஜம். ஒரு காலத்தில் நான் நேசித்த மனிதனிடமிருந்தும் திருமணம் என்ற பொன் விலங்கிலிருந்தும் ஓடிப் போகிறேன் எனது கைகள் அழுத்தமாகப் பற்றியிருப்பதையும் மீறி நான் அணிந்திருந்த வெள்ளைச் சேலை நான் முன்னேறி நடக்க நடக்க பாய்மரம் போல் காற்றில் ஆவேசத்துடன் படபடத்தது. அமைதி குலைவுற்றிருந்த வேளையில் தனிமை, மேகத்தின் மென்மையுடனே என்னைப் போர்த்திக் கொண்டது. ஒரு சிறுமியாயிருக்கும் போதே அதன் தொடுதலை உணர்ந்திருக்கிறேன். கடற்காற்று ஓங்கி வீசுகையில் என் கால்கள் பிடி தளர்ந்து தள்ளாடின தண்டு வளைகள் நிறைந்த ஈரமணலில் பாதம் புதையுண்டது. அந்தத் தருணங்களில் மட்டும் புதிதாய் முளை விட்டிருக்கும் வேதனை இதயத்திலிருந்து பீறிட்டது.
கடலின் சில்லிப்பு என் பாதங்களை மரக்க வைத்தது. பறவைகள் வராந்தாவில் கீறிச்சிடும் போது, நடுமுற்றத்தில் சூரியஒளி படரும்போது அந்த இரண்டு பேரும் இறந்தவர்கள் - உயிருள்ளவர்கள் தங்கள் கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். கனத்த மனதுடன் அங்குமிங்குமாக ஒவ்வொரு அறையாக என்னைத் தேடுவார்கள்.
சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் நடுமுற்றத்தின் ஓரங்களிலிருக்கும் சிலைகளின் மேல் விடும். அவை உயிர் பெறும். வயோதிகம் பீடிக்கப்பெற்ற அந்த மனிதனும் அந்த பதினேழு வயது பெண்ணும் சிலையாக மாறுவார்கள். அவர்கள் கல்வியிலும் வெறும் சிலையாக மட்டுமே இருப்பார்கள். விரிந்த நாசிகளுடைய பந்தயக் குதிரைகளின் சிலைகள் போல.
திடீரென்று கடலில் பிணவாடை வீசுவதை உணர்ந்தேன். மேலெழும்ப முயற்சிக்கும் பட்டம் போல, எனது கரங்கள் காற்றில் உறைந்து விடாதபடிக்கு அவற்றை ஆட்டிக்கொண்டே முன்னே ஓடினேன். அந்தத் தருணத்தில் சூரியன் எனது வலது கண்ணின் ஓரம் வழியே கிழக்கில் உதிக்கக்கண்டேன்.
நன்றி: Indian Literature (Original)
நன்றி: யுகம் மாறும் 1999 (தமிழில் வெளிவந்தது)
Friday, May 28, 2004
Sunday, May 23, 2004
எங்கே தவறு?
பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும் மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள்.
ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை.
கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின.
ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.
-உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது. -
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.
அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள்.
அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான்.
ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும்.
மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.
-என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ? -
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.
-நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய். - சீறினான் மகேசன்.
மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.
- என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?-
அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.
- ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்! -
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.
அவளது அக்கா சுபேதாவும,; அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.
-கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன் - வரமாட்டேன் என்று மது மறுத்துத்தான் பார்த்தாள்.
சுவேதாதான் போனுக்கு மேல் போனாக அடித்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.
வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த
மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள்.
சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.
கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.
குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும,; எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.
சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் - hP போட்டுத் தா. பக்கத்திலை
இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை....... என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் - உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை - என்று முறையிட்டாள்.
முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும்
- என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை. - புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.
வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. - மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே - என்று சினப்பட்டாள்.
குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்
குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள்.
பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.
- உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு.
சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.
மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான்.
பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.
இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள்.
தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.
அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.
மகேசன் - அவன் உன்ரை புருசனோ - என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.
அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் து}ங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.
நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.
-சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே!
ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?
பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.
இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.
சந்திரவதனா
யேர்மனி
ஒரு பிற்குறிப்பு
-------------------------
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி.................!
பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)
ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை.
கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின.
ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.
-உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது. -
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.
அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள்.
அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான்.
ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும்.
மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.
-என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ? -
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.
-நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய். - சீறினான் மகேசன்.
மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.
- என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?-
அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.
- ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்! -
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.
அவளது அக்கா சுபேதாவும,; அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.
-கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன் - வரமாட்டேன் என்று மது மறுத்துத்தான் பார்த்தாள்.
சுவேதாதான் போனுக்கு மேல் போனாக அடித்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.
வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த
மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள்.
சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.
கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.
குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும,; எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.
சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் - hP போட்டுத் தா. பக்கத்திலை
இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை....... என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் - உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை - என்று முறையிட்டாள்.
முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும்
- என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை. - புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.
வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. - மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே - என்று சினப்பட்டாள்.
குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்
குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள்.
பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.
- உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு.
சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.
மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான்.
பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.
இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள்.
தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.
அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.
மகேசன் - அவன் உன்ரை புருசனோ - என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.
அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் து}ங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.
நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.
-சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே!
ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?
பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.
இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.
சந்திரவதனா
யேர்மனி
ஒரு பிற்குறிப்பு
-------------------------
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி.................!
பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)
Saturday, May 22, 2004
விடுபடல்
சு. தர்ம மகாராஜன் - இலங்கை
தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.
தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.
இன்றும் அப்படித்தான், தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத, கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.
பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே, வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை, மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.
நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின், குடும்ப நெருக்கடியில் நசிந்து, மனதின் விருப்பம்கூட எண்ணாது, குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோடும், மேள முழக்கங்களோடும், பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.
வாரத்தில் நான்கு நாட்கள், இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.
இரவுகள் என்றாலே பயம், எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற, அவளது தனிமையான தீர்வு, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.
தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது, தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.
போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய், ஒவ்வொரு இரவும் அவனுக்கு, ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும், அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும், இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.
அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.
அவள் கணவனை உதறிய சமூகம், அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால், அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.
தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின்பின், முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன், பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.
அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல, அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.
வீடு திருமணத்திற்கு பின், அவனது மரணத்தில், சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு, அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை, உறவினர் கூட்டம் இழுத்து வந்து, சவத்தினருகே குந்த வைத்து, வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.
இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி, புணரத்துடிக்கும், அந்த விகாரமான முகத்தைவிட, உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.
மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.
இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று, அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.
நேரம் போகப் போக, அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.
ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில், அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.
ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல், அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
முற்றும்
சு. தர்ம மகாராஜன்
இலங்கை
தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.
தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.
இன்றும் அப்படித்தான், தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத, கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.
பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே, வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை, மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.
நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின், குடும்ப நெருக்கடியில் நசிந்து, மனதின் விருப்பம்கூட எண்ணாது, குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோடும், மேள முழக்கங்களோடும், பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.
வாரத்தில் நான்கு நாட்கள், இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.
இரவுகள் என்றாலே பயம், எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற, அவளது தனிமையான தீர்வு, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.
தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது, தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.
போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய், ஒவ்வொரு இரவும் அவனுக்கு, ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும், அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும், இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.
அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.
அவள் கணவனை உதறிய சமூகம், அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால், அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.
தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின்பின், முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன், பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.
அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல, அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.
வீடு திருமணத்திற்கு பின், அவனது மரணத்தில், சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு, அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை, உறவினர் கூட்டம் இழுத்து வந்து, சவத்தினருகே குந்த வைத்து, வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.
இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி, புணரத்துடிக்கும், அந்த விகாரமான முகத்தைவிட, உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.
மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.
இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று, அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.
நேரம் போகப் போக, அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.
ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில், அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.
ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல், அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
முற்றும்
சு. தர்ம மகாராஜன்
இலங்கை
Saturday, March 20, 2004
சுவாலை
- ஞானம் -
பானுதேவன் தன் கொடிய கதிர்களால் புவி மக்களின் பசிய உடம்பைக் கருக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வாயுதேவன் அப்பக்கம் எட்டிப் பார்க்கவே தயங்கி எங்கோ ஓடி ஒழிந்து விட்டான். வெம்மை தாங்காமல் பறவைகள் கூட அகப்பட்ட அரும்பொட்டு நிழல்களில் பதுங்கிக் கொண்டன.
புனிதா காலையிலேயே ஊறவைத்த, கணவனதும் குழந்தைகளதும் அழுக்கான உடுப்புக்களைக் கிணற்றில் நாலு வாளி தண்ணீர் அள்ளித் தொட்டியுள் ஊற்றி, அவற்றை அலசிக் கழுவிக் கொடியில் உலர்த்திவிட்டு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். குழந்தை முகுந்தன் வயிறு நிறையப் பால் குடித்த திருப்தியில் உள்ளே நல்ல நித்திரை.
'நேர்சரி' போகத் தொடங்கியிருக்கும் முரளி அத்திண்ணையில் குப்புறப்படுத்துக் கொப்பியில் கலர்ப் பென்சில்களால் தன் மனதுக்குள் எட்டியவற்றைச் சித்திரம் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
தினமும் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியே வந்து திண்ணயையொட்டி வளர்ந்துள்ள வேப்பமரத்தின் கால்களைச் சுற்றிவருவதால் இலைகள் உதிராமல் குளிர்மையாக மரம் இருந்தது.
வெப்பத்தின் களைப்புக்கு அந்தத் திண்ணைச் சுவரில் சாய்ந்திருப்பது புனிதாவுக்கு இதமாக இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அவ்வூர்ப் பாடசாலையில், நகரப்பகுதியில் இயங்கிவரும் 'பெண்கள் அமைப்பு" நடத்திய பெண்கள் முன்னேற்றக் கருத்தரங்கிற்கு அவளும் சென்றிருந்தாள். பிரதான பேச்சாளர் முன்வைத்த கருத்து புனிதாவின் மனதில் ஆழமாகப் பதித்திருந்தது. அது இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல......
'ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில் பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சகமனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண் நாயகப்போக்கு சமுதாயத்திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடிவேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விரும்பம் மதிக்கப்படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப்படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாங்கங்கள் மாற்றமடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப்படாதவரை பெண்களுக்கு விடிவேயில்லை".
தன்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சத்திய வாசகம் என ஏக்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சு உஷ்ணத்துடன் கரைந்தது.
புனிதா, க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்றுவிட்டாள் என்பதை அறிந்தபோது பாராட்டுத் தெரிவிப்பதற்குப் பதிலாக 'படித்தது இனிப் போதும்' என்று பெற்றோர்கள் கூறினார்.
'அவள் கெட்டிக்காரி படிப்பைத் தொடரட்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியபடியால் ஒப்பாசாரமாக உயர் தரம் ஓராமாண்டில் தொடர்ந்து படிக்க அனுப்பியபோதியலும் தாயும் தகப்பனுமாகக் 'குசுகுசு'வெனப் பேசித் தமக்குள்ளே ஒரு கணக்குப்போட்டுக் கொண்டனர்.
.
'இவள் பெரிய படிப்புப் படிச்சால் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிக் கட்டிக் குடுக்க எங்களிடம் என்ன வசதியிருக்கு? இளைவளும் பெரியவாகிற வயதுக்கு வந்து கொண்டிருக்கிறாள். இவளின்ரை காரியத்தை இழுபடவிட்டால் பிறகு இருகுமரையும் எப்படிச் சுமத்து?
புனிதா உயர்தரம் இறுதிப்ப பரீட்சை எழுதுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே உறவுக்காரப் பையன் ஒருவனைக் கூட்டி வந்து காட்டி, அடுத்த முகூர்த்தநாளில் இவளின் விருப்பத்தைக் கேளாமல் அவனைத் தாலிகட்ட வைத்தனர். பாவம் புதனிதாவின் தாய் தகப்பனுக்கு மகள் மீது பாசமில்லாம் இல்லை. மண் வெட்டியையும் தோட்டத்தையும் நம்பிப் பிழைக்கிற குடும்பம், படிப்பறிவுமில்லை, எத்தனையோ கோவில்களைச் சுற்றி வந்தும் ஒரு ஆண்குழந்தை கூட அவர்களுக்குப் பிறக்கவில்லை. பெற்றது இரண்டும் பெட்டைக் குஞ்சுகள். அதனால் இந்த அவசரமும் எரிச்சலும்!
இறுக்கமாக மிச்சம் பிடித்துச் சேகரித்த பணத்தில் மகளின் கழுத்துக்கும் கைகளுக்கும் நகைகளைப் போட்டுக் கலியாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்ட திருப்தி அவர்களுக்கு!
திருமணம் முடிந்து ஒருவாரம் கழியும் முன்பே 'சிவனேசா, இது சிறிய வீடு நாலுபேருக்கும் காணாது. அதனால் நாங்கள் இனி உன் அக்காவீட்டில் இருக்கப்போகிறோம்" எனச் சொல்லிவிட்டு அவளின் பெற்றோர் தமது பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய் விட்டனர்.
முன் அறிமுகமோ பழக்கமோ இல்லாதவனுடன் படுத்தெழும்புவது ஆரம்ப நாட்களில் அருவருப்பாயிருந்த போதிலும் புவனாவின் இளமையின் உணர்வு அவனை ஏற்றுச் சகித்துக் கொள்ளச் செய்தது.
அயல் வீட்டுப்பெண்கள் பகல் வேளைகளில் அவன் இல்லாத நாட்களில் புதுப் பெண்ணைப் பார்க்க வந்த சாட்டில், அவனைப் பற்றிச் சொன்னவை அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் ஏற்படுத்தின. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திப் போட்டு காவாலியாக ஊர் சுற்றித் திரிந்தவனாம். அவனின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் அவனது தாய் தகப்பன் ஒரு ஜஸ்கிறீம் கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தவையாம்.
'அவன் போக்குச் சரியில்லை. குடித்துவிட்டு வருவதால் வேலை ஒழுங்காக செய்வதில்லை' என சில மாசங்களிலேயே கடை உரிமையாளர் தகப்பனிடம் வந்து முணு முணுக்கத் தொடங்கி விட்டாராம்.
ஒரு கால் கட்டுப் போட்டால் சரியாகி விடுவான். வாறவள் திருத்திப் போடுவாள்' என அவனின் தாய் அடியெடுத்துக் கொடுக்க, தகப்பன் புனிதாவின் பெற்றோரிடம் பேசி, அவசரம் அவசரமாக செல்வி குமுதா திருமதி சிவனேசனாக்கப்பட்டிருக்கிறாள்.
'பொறாமை பிடித்த சனங்கள் அப்படி இருக்காது" என எண்ணி மனதைத் தேற்கிக் கொண்டாள்.
'புனிதா! நீர் நல்ல வடிவு. நாள் முழுவதும் ரோஜாமாதிரி உம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்." என அவன் அவளைப் புகழ்ந்தபோது அவள் கன்னங்கள் ரோஜாவாகின.
'எனக்கு அவனின் கீழ் வேலை செய்யப் பிடிக்கேலை. இனி சுயதொழில் செய்து என் செல்லத்தைச் சந்தோஷமாக வைக்கப் போறன்" அவளின் கன்னத்தை வருடியபடி சொன்னான் சிவனேசன்.
'சுயதொழில் செய்ய கொஞ்சம் முதல்தேவை. கைநிறையச் சம்பாதிக்கலாம். உமது நகைகளைத் தந்தீரெண்டால் இதுமாதிரி இருமடங்கு நகைகளை மூண்டுநாலு மாசத்தில் செய்திடலாம்" அவன் தயங்கித் தயங்கி நைஸாகக் கேட்டான்.
அவனது சுயதொழில் ஆர்வம் சரியெனக் கருதிய புனிதா தனது சீதமான நகைளைக் கழற்கிக் கொடுத்தாள்.
அன்று மாலையே தகரத்தினால் செய்யப்பட்ட ஜஸ்கிறீம் உற்பத்திக்காரரிடம் வாங்கி நிரப்பிக் கொண்டு நாளைக்கு காலையிலிருந்தே என் வியாபாரத் திறமையைக் காட்டுறன் பார் புனிதா".
கொள்முதல் கடனைக் கொடுத்து விட்டு மறுநாள் மாலை 180 ரூபாவை அவளிடம் கொண்டு வந்து நீட்டியபோது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது. 'நாளைக்கு இன்னும் டபிளாக்கிக் காட்டுறன் பாரும்". சாப்பிட்டு கொண்டே சவால் போலக் கூறினான்.
அடுத்தநாள் வீடுவரும்போது ஜஸ்கிறீம் வண்டி தள்ளாடிக் கொண்டு வந்து.
'எடியே எடுத்து வை சோத்தை' மதுபோதையில் அவன் வாய் குழறியது. 70 ரூபாவை எடுத்து நீட்டினான்.
'என்ன! குடித்துவிட்டு வந்திரக்கிறியள்? ஏன் இந்த புதுப்பழக்கம்?"
'பகலெல்லாம் உழைத்துக் களைத்த அலுப்பில் குடித்தால் உனக்கென்னடி. குடி ஒண்டும் எனக்குப் புதிசில்லையடி"
புனிதாவின் உள்ளத்தில் கோபமும் ஏமாற்றமும் கொப்பளித்தன.
சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு அவள் போய்ப் படுத்து விட்டாள்.
அவள் சாப்பிட்டாளா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சோற்றை அள்ளி வயிற்றில் அடைந்தவிட்டு, அவளருகே வந்து படுத்தவன் அவள்மீது கையைப் போட்டு இறுக்கி அணைத்தான்.
அவள் திமிறினாள்.
உடம்பைச் சுற்றிய பாம்பு அதன் வெறியைக் கக்கிய பின்பே பிடியைத் தளத்தியது.
மறுநாள், அதற்கும் மறுநாள் என அவள் கைக்கு வருவது 50,60 ரூபா மட்டுமே என்றாகியது.
ஒரு நாள் காலை வெறியில்லாமல் அவன் இருந்தபோது வருமானம் போதாததால், தனது படிப்புக்கேற்ற வகையில் தானும் ஏதாவது தொழில் தேடட்டுமா என அவனைக் கேட்டாள்.
'நீ படித்ததை உன்னோடை வைச்சுக் கொள். தொழில் பாக்கிறனெண்டு சொல்லிக்கொண்டு ஊர் மேய்ந்து திரிய வேண்டாம். பொம்பிளை உழைச்சு வீடு நிறையாது? நான் உழைக்கிற காசை வைச்சுக் சமாளிக்சுக் கொண்டு வீட்டிலே அடங்கியிரு. வீட்டு வேலையைப் ஒழுங்காய்ப் பார்"
அவனை எதிர்த்தால் அடி உதைகளையே வேண்டிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
பாடசாலை நாட்களில் கவிதை சிறுகதை என எழுதிப் பாராட்டுப் பெற்றவள். தனிமையாகப் பொழுதைப் போக்க படிப்பது எழுதுவது எனத் தொடங்கி எதியவற்றை முடிக்க முடியாமல் தலைசுற்றும் வாந்தியும் அடிக்கடி குறுக்கிட்டன.
அடிப் பெட்டிக்குள் அவற்றைப் போட்டு மூடிவைத்துவிட்டுப் வீடு துப்பரவாக்கல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல், உடுப்புத் தோய்த்தல் என்பவற்றோடு கர்ப்பமாதல், குழந்தை பெறுதல், பாலூட்டல், பராமரித்தல் என்ற வேலைகளும் அவளை இறுகிப் பிடித்துக் கொண்டன.
மாலையானதும் அவனது வழமையான தள்ளாட்டம். 'எடியே! சோத்தைப் போடடி? உறுமல் அது முடிய 'படுக்க வாடி பலவந்தமான கர்ச்சனை.
புனித 21 வயதுக்கிடையிலேயே இருபிள்ளைகளைப் பெற்று காய்ந்த ஒடியல் போலானாள்.
பல சரக்குக் கடையில் அரிசிவாங்கச் சென்ற போதுதான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தாள். மாவட்ட கலாச்சாரப் பேரவை சிறுகதைப் போட்டி ஒன்றை நடந்துவதற்காக விளம்பரம் செய்திருந்தது.
மனதில் ஒரு ஆசை முளையிட்டது.
அடிப் பெட்டியில் போட்டிருந்த நிறைவு செய்யப்படாத கதையொன்றை எடுத்து அதைப்பூரணப்படுத்தி அனுப்புவதற்காக அவள்பட்ட பாடுகள்............
அவள் எழுதிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்த குழந்தை முகுந்தன் பாலுக்கழுதது. பால்கொடுத்து அதனைத் தூங்க வைத்து விட்டு எழுதத் துவங்கிய போது, எழுதிவைத்த தாள்களை மூத்தமகன் முரளி எடுத்துக் கசக்கிக் கப்பல் செய்து கொண்டிருந்தான். எரிச்சலில் அவன் முதுகில் இரண்டு வைக்க அவன் வீரிட்டழ திடுக்கிட்டெழுந்து தத்தி ஓடி வந்த சின்னன் கதை எழுதி வைத்திருந்த ஏனைய தாள்களிலும் சிறுநீர் கழித்துவிட... அவள் ஏசி உலுக்க இரண்டும் வீரிட்டுக் கதறிக் கச்சேரி பண்ணின. அவர்களைச் சமாதாப்படுத்துவதே போது போது மென்றாகிவிட்டது.
இனி,
.
சைக்கிளின் தள்ளாட்டம்
'எடியே! சோத்தைப் போடடி'
'கெதியாய்ப் படுக்கவாடி'
அடுத்த நாள்
காலைச் சாப்பாடு முடித்து ஜஸ்கிறீம் சைக்கிளை அனுப்பி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவூட்டி விளையாட விட்டுவிட்டு அவசர அவசரமாக உடுப்புகளைத் தோய்த்து உலரவிட்டபின் எழுதத் தொடங்க உட்கார்ந்தபோது....
முகந்தன் காற்சட்டையை நனைத்துப்போட்டு வீரிட்டுக் கதறினான். ஓடிப்போய் அவனைத்தூக்கிக் கழுவி உடுப்புமாற்றிப் பவுடர்போட்டுத் தொட்டலில் கிடத்தி ஆட்டிவிட்டுப் பேணையைத் தூக்கியபோது, வீட்டுச் சொந்தக்காரன் வாடகைப் பணத்தைத் தருமாறு தூஷண வார்த்தைகளால் அபிஷேகித்துத் தலைகுனிய வைத்தான்.
அவனைக் கெஞ்சி, தவணை சொல்லி அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது.
'ஏன், உன்ரை புருசன் உழைக்கிற காசு முழுவதும் குடிச்சுத் தூலைக்கிறாரோ? இல்லாட்டி வேறு வைப்பாட்டி இருக்கோ? வீட்டுக்காரன் என்ன கேள்வியெல்லாம்... சீ........... தூஷணம்கூடம் பேசிவிட்டுப் போறான். அயலட்டைச் சனம் சிரிக்குது"
பக்கத்து வீட்டு பார்வதிக் கிழவி விண்ணாணமாக விசாரித்து இன்னுமின்னும் எரிச்சலை மூட்டிவிட்டுப் போனாள்.
'இந்தக் குடிகாரனோடு நரக வாழ்க்கை வாழவேணுமென்பது என்ரை தலையெழுத்தாய்ப் போச்சு' வெளியே சொல்ல முடியாமல் அவள் மனம் குமைந்தது. அன்றும் கதையை எழுதி முடிக்க முடியவில்லை.
மாலையில் வழமைபோல சைக்கிள் தள்ளாட்டம்.
'பசி வயித்தைக் கிள்ளுது சோத்தைப் போடடி"
சோற்றுத் தட்டை அவன் முன்னே வைத்துவிட்டு வாடகைக் காசுக்காக வீட்டுக்காரன் வந்து ஏசிப்போனதைச் சொன்னாள் புனிதா.
'வாடகை கேட்க வந்தவனோ உன்னோடை சரசமாட வந்தவனோ?" வாய் உழற வார்த்தைகளைக் கொட்டினான்.
'சே! எளிய மனிசா! என்ன சொல்லுறாய்? வாடகை காசு கொடுக்க வக்கில்லை. உனக்கு வீடென்ன குடும்பமென்ன?" சீற்றத்துடன் புதிதா கத்தினாள்.
சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து விட்டுத்துள்ளி எழுத்தவன் அவள் கன்னங்களிலும் உடம்பிலும் கோபம் தீரும்வரை அறைந்தான். குழந்தைகள் வீரிட்டுக் கத்தின.
அவனது அட்டகாசத்தைக் கேட்ட அயலவர்களின் தலைகள் வேலிக்கு மேலாய் எட்டி விடுப்புப் பார்த்தன.
குழந்தைகளை அணைத்தபடி அவள் இரவு முழுவதும் விம்மிக் கொண்டேயிருந்தாள்.
நிறைவெறியில் அவன் உடுத்திருந்த சாரம் கழன்றது கூடத் தெரியாமல் அவன் உறங்கிப் போனான்.
காலையில் எழுத்து பார்த்தபோது சைக்கிளுடன் அவன் நேரகாலத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டான்.
விசுக்கோத்தையும் பாலையும் கொடுத்துப் பிள்ளைகளைச் சமாளித்து விட்டு உடம்பு வலிதீர அவள் நோ எண்ணெய் தடவி விட்டுப் படுத்துக் கிடந்தாள்.
மாலையில் சைக்கிள் நிதானமாக வந்து நின்றது. தள்ளாட்டமில்லை.
'முரளி நான் வெளியே சாப்பிட்டு விட்டன் உங்களுக்கு இடியப்பப் பார்சல் வாங்கியிருக்கு, 300 வைச்சிருக்கு நாளைக்கு வீட்டு வாடகையைக் குடுத்திடச் சொல்லு"
அவன் போய்ப் படுத்து உறங்கி விட்டான்.
இலக்கியப் போட்டி இறுதிநாளுக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன! எப்படியும் நாளைக்கு எழுதி முடித்து அனுப்புவதென்ற வைராக்கியத்துடன் குழந்தைகளை அணைத்தபடி அவளும் உறங்கிவிட்டாள்.
ரொட்டியையும் தேநீரையும் காலை உணவாக அவனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டு, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, முரளியை அயலிலுள்ள நேர்சரிக்கு அனுப்பிவிட்டு முகுந்தனுக்கு சோற்றைக் கரையல் செய்து ஊட்டித் தொட்டிலில் போட்டுவிட்டு, மத்தியானத்துக்கு முன்பே கதையை எழுதி முடித்துவிட்டாள். திரும்பித்திரும்பி இருதடவைகள் படித்துப் பார்த்தாள்.
மனதிற்குத் திருப்தியாக இருந்தது. அன்றே தபாலில் சேர்த்துவிட்டாள்.
'அம்மா, தபால் அங்கிள் வாசலில் நிற்கிறார்"
கிறுக்கிக் கொண்டிருந்த கலர்ப் பென்சில்களை வீசி எறிந்து விட்டுப் படலையை நோக்கி முரளி ஓடிச் சென்ற போதுதான் அவரின் நீண்ட சிந்தனை கலைந்தது.
வானத்தில் மப்பிட்ட மேகக் கூட்டங்களைக் கண்டதால் போலும் எங்கோ ஒரு குயில் கூக்கூ.........கூக்கூ...... என்று குதூகலித்தது.
வேப்பமரத்தில் அதுவரை முடங்கியிருந்த காகங்கள் கூட 'காகா" என்றபடி சிறகடித்துப் பறந்தன!
முரளி கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தபோது அவள் உள்ளத்தில் மகிழ்ச்சிப்பூ விரிந்து நிறைந்தது!
'முரளி! உன்ரை அம்மாவுக்கு முதற் பரிசெடா கண்ணே! என அவனை அணைத்து உச்சியெல்லாம் முத்தமிட்டுத் தனது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
அன்று மாலை வேதாளம் தள்ளாடிக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்றது.
'சோத்தைப் போடடி"
தட்டில் சோறு கறியைப் பரிமாறி வைத்தாள்.
அருகே உட்கார்ந்தபடி தனக்குப் பரிசு கிடைத்திருக்கும் செய்தியையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதனைப் பெற்றுக் கொள்வதற்காகப் பட்டணத்துக்குப் போக வேண்டும் என்பதையும் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
'அதென்னடி பரிசு கிரிசென்று அலட்டுறாய்! அக்கறையின்றி உளறியவன் அடுத்துக் கேட்டான்.
'காசும் தருவாங்களோ?"
'ஓம்' என்றாள் அவள்.
'எவ்வளவு'
'அது தெரியாது
அப்படியே, அப்பசரி ஞாயிற்றுக் கிழமைதானே! பார்வதிக் கிழவியிடம் குழந்தையைப் பாத்துக்கொள்ளும்படி விடு: நீ மூத்தவனைக் கூட்டிக் கொண்டுபோ.
பக்குவமாக் காசை வாங்கிக் கொண்டு வா: காசு கவனம்" வெறியையும் மீறிக் கொண்ட அவனுக்குள் ஒரு சிரிப்பு!
விழா மண்டபத்தின் வாசலை நெருங்கியபோது, அது கலியாணக் களை கொண்டிருந்தது.
வாசலில் பழக்குலையோடு வாழை மரங்கள்!
மாவிலை தோரணம்!
கலாச்சாரப் பெருவிழா என்ற பதாகை. ஒலிபெருக்கியில் இதமான நாதஸ்வர இசை.
வாசலில் அழகிய கோலம் நிறைகுடம். சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்கும் இரு இளம் பெண்கள். அந்தப் பெண்களிடம் அழைப்பிதழைக் காட்டினாள்.
அவர்களில் ஒருத்தி புனிதாவைக் கூட்டிச் சென்று முதல்வரிசை ஆசனத்தில் இருத்தினாள்.
மேடையில் வரிசையாக இருபுறமும் பூஞ்சாடிகள். மண்டபத்துக்கு வண்ண வண்ணமாகக் கடதாசிக் சோடனைகள்! பலூன்கள்!
பிரதம விருந்தினரான மாவட்ட மந்திரி நேரத்துக்கே வந்துவிட்டதால், அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பகல் 10 மணிக்கே மங்கள விளக்கேற்றலுடன் விழாத் தொடங்கியது.
அரசாங்க அதிபர் வரவேற்புரை, பிரதம அதிதிஉரை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.
'சிறுகதை - முதல் பரிசு திருமதி புனிதா"
அறிப்பாளரின் கம்பீரக்குரல் மண்டபமெங்கும் ஒலித்தது! இரு இளம் பெண்கள் அவளருகில் வந்து, மேளம் கொட்ட அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
புனிதாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆனந்தப் படபடப்பு! சரஸ்வதி விருது, பரிசுப் பணம் ஜயாயிரம் ரூபா சான்றிதழ், பொன்னாடை, பூமாலை இவற்றைப் பெற்றுக் கொண்டபோது சபையில் எழுந்த கரகோஷப் பாராட்டு அவளைச் சிலிர்க்க வைத்தது!
மேடையிலிருந்து மகிழ்ச்சிபொங்க இறங்கிவந்து அவள் கீழே உட்கார்ந்து போது அவள் மகன் முரளி அவளது காதுக்குள் அச்சா அம்மா! கெட்டிக்காரி எனக்கு சரியான புழுகம்..........! 'என்றெல்லாம் தன் பிஞ்சு மொழியில் தாயை மேலும் குளிர வைத்தான்.
மகிழ்வால் அவள் பூரித்தாள்.
'அம்மா நான் இந்தச் சரஸ்வதி சாமியைப் படிக்கிற மேசையில் வைச்சு ஒவ்வொரு நாளும் விளக்குக் கொழுத்திக் கும்பிடப் போறன்". அந்தச் சின்ன உள்ளமும் கற்பனையில் மிதந்தது.
சரஸ்வதி தோற்றத்திலான அவ்விருதைத் தாயிடமிருந்து வாங்கி உற்று உற்றுப் பார்த்து ஆசையோடு அதனைத் தொட்டுத் தடவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உள்ளத்தின் பெருமை, புனிதாவைப் பரவசப்படுத்தியது.
பஸ்பிடித்து வீடுவந்து சேர 2 மணியாகிவிட்டது. இனித்தான் சமைக்க வேண்டும்.
திண்ணையில் சிகரெட் புகைத்தபடி இருந்த சிவனேசன், அவள் கொண்டு வந்த பையைப் பறித்துத் துளாவினான்.
'சரஸ்வதி விருது", சான்றிதழ், ஆகியவற்றை அலட்சியமாகத் திண்ணையில் போட்டுவிட்டு என்வலப்பை அவசரமாகப் பிரித்துப் பார்த்து 'ஓ! ஜயாயிரமோ நல்லதாய்ப்போச்சு! என்ரை வியாபாரத்தை விஸ்தரிக்க எனக்கு அவசரமாகத் தேவை" என்றபடி தனது சட்டைப் பையுள் திணித்துக் கொண்டான்.
'கெதியாய்ச் சமை நான் வெளியே போட்டுவாறான்" அவன் சைக்களில் புறப்பட்டுவிட்டான்.
திண்ணை அருகேயிருந்த வேப்பமரத்திலிருந்த ஒரு காகம் அனுங்கியபடி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைத் தூரத்தி வந்த கொழுத்த அண்டங்காகம், அதன் ஈனஸ்வரக் கத்தலையும் பொருட்படுத்தாமல் தடித்த கருஞ் சொண்டுகளால் கொத்திக் கொத்தி...........
முரளி அதைப்பார்த்துப் பயத்தால் சரஸ்வதி சிலையையும் சான்றிதழையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.
புனிதா உடுப்பை மாற்றிக் கொண்டு சமைப்பதற்காக அடுப்பை மூட்டினாள்.
'ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்ப நிறுவனத்தில் பெண்ணின் கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியை உயிரும் உணர்வுள்ள சக மனுஷியாக அல்லாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல நடத்தும் ஆண்நாயகப் போக்கு சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படும்வரை பெண்களுக்கு விடிவேயில்லை."
கருத்தரங்கில் கேட்ட குரல் புனிதாவின் காதுகளில் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் ஒலித்தது!
அந்த அடுப்பு மெல்ல மெல்ல மூண்டு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.
- ஞானம் -
நன்றி - சூரியன்.கொம்
பானுதேவன் தன் கொடிய கதிர்களால் புவி மக்களின் பசிய உடம்பைக் கருக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வாயுதேவன் அப்பக்கம் எட்டிப் பார்க்கவே தயங்கி எங்கோ ஓடி ஒழிந்து விட்டான். வெம்மை தாங்காமல் பறவைகள் கூட அகப்பட்ட அரும்பொட்டு நிழல்களில் பதுங்கிக் கொண்டன.
புனிதா காலையிலேயே ஊறவைத்த, கணவனதும் குழந்தைகளதும் அழுக்கான உடுப்புக்களைக் கிணற்றில் நாலு வாளி தண்ணீர் அள்ளித் தொட்டியுள் ஊற்றி, அவற்றை அலசிக் கழுவிக் கொடியில் உலர்த்திவிட்டு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். குழந்தை முகுந்தன் வயிறு நிறையப் பால் குடித்த திருப்தியில் உள்ளே நல்ல நித்திரை.
'நேர்சரி' போகத் தொடங்கியிருக்கும் முரளி அத்திண்ணையில் குப்புறப்படுத்துக் கொப்பியில் கலர்ப் பென்சில்களால் தன் மனதுக்குள் எட்டியவற்றைச் சித்திரம் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
தினமும் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியே வந்து திண்ணயையொட்டி வளர்ந்துள்ள வேப்பமரத்தின் கால்களைச் சுற்றிவருவதால் இலைகள் உதிராமல் குளிர்மையாக மரம் இருந்தது.
வெப்பத்தின் களைப்புக்கு அந்தத் திண்ணைச் சுவரில் சாய்ந்திருப்பது புனிதாவுக்கு இதமாக இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அவ்வூர்ப் பாடசாலையில், நகரப்பகுதியில் இயங்கிவரும் 'பெண்கள் அமைப்பு" நடத்திய பெண்கள் முன்னேற்றக் கருத்தரங்கிற்கு அவளும் சென்றிருந்தாள். பிரதான பேச்சாளர் முன்வைத்த கருத்து புனிதாவின் மனதில் ஆழமாகப் பதித்திருந்தது. அது இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல......
'ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில் பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சகமனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண் நாயகப்போக்கு சமுதாயத்திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடிவேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விரும்பம் மதிக்கப்படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப்படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாங்கங்கள் மாற்றமடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப்படாதவரை பெண்களுக்கு விடிவேயில்லை".
தன்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சத்திய வாசகம் என ஏக்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சு உஷ்ணத்துடன் கரைந்தது.
புனிதா, க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்றுவிட்டாள் என்பதை அறிந்தபோது பாராட்டுத் தெரிவிப்பதற்குப் பதிலாக 'படித்தது இனிப் போதும்' என்று பெற்றோர்கள் கூறினார்.
'அவள் கெட்டிக்காரி படிப்பைத் தொடரட்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியபடியால் ஒப்பாசாரமாக உயர் தரம் ஓராமாண்டில் தொடர்ந்து படிக்க அனுப்பியபோதியலும் தாயும் தகப்பனுமாகக் 'குசுகுசு'வெனப் பேசித் தமக்குள்ளே ஒரு கணக்குப்போட்டுக் கொண்டனர்.
.
'இவள் பெரிய படிப்புப் படிச்சால் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிக் கட்டிக் குடுக்க எங்களிடம் என்ன வசதியிருக்கு? இளைவளும் பெரியவாகிற வயதுக்கு வந்து கொண்டிருக்கிறாள். இவளின்ரை காரியத்தை இழுபடவிட்டால் பிறகு இருகுமரையும் எப்படிச் சுமத்து?
புனிதா உயர்தரம் இறுதிப்ப பரீட்சை எழுதுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே உறவுக்காரப் பையன் ஒருவனைக் கூட்டி வந்து காட்டி, அடுத்த முகூர்த்தநாளில் இவளின் விருப்பத்தைக் கேளாமல் அவனைத் தாலிகட்ட வைத்தனர். பாவம் புதனிதாவின் தாய் தகப்பனுக்கு மகள் மீது பாசமில்லாம் இல்லை. மண் வெட்டியையும் தோட்டத்தையும் நம்பிப் பிழைக்கிற குடும்பம், படிப்பறிவுமில்லை, எத்தனையோ கோவில்களைச் சுற்றி வந்தும் ஒரு ஆண்குழந்தை கூட அவர்களுக்குப் பிறக்கவில்லை. பெற்றது இரண்டும் பெட்டைக் குஞ்சுகள். அதனால் இந்த அவசரமும் எரிச்சலும்!
இறுக்கமாக மிச்சம் பிடித்துச் சேகரித்த பணத்தில் மகளின் கழுத்துக்கும் கைகளுக்கும் நகைகளைப் போட்டுக் கலியாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்ட திருப்தி அவர்களுக்கு!
திருமணம் முடிந்து ஒருவாரம் கழியும் முன்பே 'சிவனேசா, இது சிறிய வீடு நாலுபேருக்கும் காணாது. அதனால் நாங்கள் இனி உன் அக்காவீட்டில் இருக்கப்போகிறோம்" எனச் சொல்லிவிட்டு அவளின் பெற்றோர் தமது பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய் விட்டனர்.
முன் அறிமுகமோ பழக்கமோ இல்லாதவனுடன் படுத்தெழும்புவது ஆரம்ப நாட்களில் அருவருப்பாயிருந்த போதிலும் புவனாவின் இளமையின் உணர்வு அவனை ஏற்றுச் சகித்துக் கொள்ளச் செய்தது.
அயல் வீட்டுப்பெண்கள் பகல் வேளைகளில் அவன் இல்லாத நாட்களில் புதுப் பெண்ணைப் பார்க்க வந்த சாட்டில், அவனைப் பற்றிச் சொன்னவை அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் ஏற்படுத்தின. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திப் போட்டு காவாலியாக ஊர் சுற்றித் திரிந்தவனாம். அவனின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் அவனது தாய் தகப்பன் ஒரு ஜஸ்கிறீம் கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தவையாம்.
'அவன் போக்குச் சரியில்லை. குடித்துவிட்டு வருவதால் வேலை ஒழுங்காக செய்வதில்லை' என சில மாசங்களிலேயே கடை உரிமையாளர் தகப்பனிடம் வந்து முணு முணுக்கத் தொடங்கி விட்டாராம்.
ஒரு கால் கட்டுப் போட்டால் சரியாகி விடுவான். வாறவள் திருத்திப் போடுவாள்' என அவனின் தாய் அடியெடுத்துக் கொடுக்க, தகப்பன் புனிதாவின் பெற்றோரிடம் பேசி, அவசரம் அவசரமாக செல்வி குமுதா திருமதி சிவனேசனாக்கப்பட்டிருக்கிறாள்.
'பொறாமை பிடித்த சனங்கள் அப்படி இருக்காது" என எண்ணி மனதைத் தேற்கிக் கொண்டாள்.
'புனிதா! நீர் நல்ல வடிவு. நாள் முழுவதும் ரோஜாமாதிரி உம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்." என அவன் அவளைப் புகழ்ந்தபோது அவள் கன்னங்கள் ரோஜாவாகின.
'எனக்கு அவனின் கீழ் வேலை செய்யப் பிடிக்கேலை. இனி சுயதொழில் செய்து என் செல்லத்தைச் சந்தோஷமாக வைக்கப் போறன்" அவளின் கன்னத்தை வருடியபடி சொன்னான் சிவனேசன்.
'சுயதொழில் செய்ய கொஞ்சம் முதல்தேவை. கைநிறையச் சம்பாதிக்கலாம். உமது நகைகளைத் தந்தீரெண்டால் இதுமாதிரி இருமடங்கு நகைகளை மூண்டுநாலு மாசத்தில் செய்திடலாம்" அவன் தயங்கித் தயங்கி நைஸாகக் கேட்டான்.
அவனது சுயதொழில் ஆர்வம் சரியெனக் கருதிய புனிதா தனது சீதமான நகைளைக் கழற்கிக் கொடுத்தாள்.
அன்று மாலையே தகரத்தினால் செய்யப்பட்ட ஜஸ்கிறீம் உற்பத்திக்காரரிடம் வாங்கி நிரப்பிக் கொண்டு நாளைக்கு காலையிலிருந்தே என் வியாபாரத் திறமையைக் காட்டுறன் பார் புனிதா".
கொள்முதல் கடனைக் கொடுத்து விட்டு மறுநாள் மாலை 180 ரூபாவை அவளிடம் கொண்டு வந்து நீட்டியபோது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது. 'நாளைக்கு இன்னும் டபிளாக்கிக் காட்டுறன் பாரும்". சாப்பிட்டு கொண்டே சவால் போலக் கூறினான்.
அடுத்தநாள் வீடுவரும்போது ஜஸ்கிறீம் வண்டி தள்ளாடிக் கொண்டு வந்து.
'எடியே எடுத்து வை சோத்தை' மதுபோதையில் அவன் வாய் குழறியது. 70 ரூபாவை எடுத்து நீட்டினான்.
'என்ன! குடித்துவிட்டு வந்திரக்கிறியள்? ஏன் இந்த புதுப்பழக்கம்?"
'பகலெல்லாம் உழைத்துக் களைத்த அலுப்பில் குடித்தால் உனக்கென்னடி. குடி ஒண்டும் எனக்குப் புதிசில்லையடி"
புனிதாவின் உள்ளத்தில் கோபமும் ஏமாற்றமும் கொப்பளித்தன.
சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு அவள் போய்ப் படுத்து விட்டாள்.
அவள் சாப்பிட்டாளா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சோற்றை அள்ளி வயிற்றில் அடைந்தவிட்டு, அவளருகே வந்து படுத்தவன் அவள்மீது கையைப் போட்டு இறுக்கி அணைத்தான்.
அவள் திமிறினாள்.
உடம்பைச் சுற்றிய பாம்பு அதன் வெறியைக் கக்கிய பின்பே பிடியைத் தளத்தியது.
மறுநாள், அதற்கும் மறுநாள் என அவள் கைக்கு வருவது 50,60 ரூபா மட்டுமே என்றாகியது.
ஒரு நாள் காலை வெறியில்லாமல் அவன் இருந்தபோது வருமானம் போதாததால், தனது படிப்புக்கேற்ற வகையில் தானும் ஏதாவது தொழில் தேடட்டுமா என அவனைக் கேட்டாள்.
'நீ படித்ததை உன்னோடை வைச்சுக் கொள். தொழில் பாக்கிறனெண்டு சொல்லிக்கொண்டு ஊர் மேய்ந்து திரிய வேண்டாம். பொம்பிளை உழைச்சு வீடு நிறையாது? நான் உழைக்கிற காசை வைச்சுக் சமாளிக்சுக் கொண்டு வீட்டிலே அடங்கியிரு. வீட்டு வேலையைப் ஒழுங்காய்ப் பார்"
அவனை எதிர்த்தால் அடி உதைகளையே வேண்டிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
பாடசாலை நாட்களில் கவிதை சிறுகதை என எழுதிப் பாராட்டுப் பெற்றவள். தனிமையாகப் பொழுதைப் போக்க படிப்பது எழுதுவது எனத் தொடங்கி எதியவற்றை முடிக்க முடியாமல் தலைசுற்றும் வாந்தியும் அடிக்கடி குறுக்கிட்டன.
அடிப் பெட்டிக்குள் அவற்றைப் போட்டு மூடிவைத்துவிட்டுப் வீடு துப்பரவாக்கல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல், உடுப்புத் தோய்த்தல் என்பவற்றோடு கர்ப்பமாதல், குழந்தை பெறுதல், பாலூட்டல், பராமரித்தல் என்ற வேலைகளும் அவளை இறுகிப் பிடித்துக் கொண்டன.
மாலையானதும் அவனது வழமையான தள்ளாட்டம். 'எடியே! சோத்தைப் போடடி? உறுமல் அது முடிய 'படுக்க வாடி பலவந்தமான கர்ச்சனை.
புனித 21 வயதுக்கிடையிலேயே இருபிள்ளைகளைப் பெற்று காய்ந்த ஒடியல் போலானாள்.
பல சரக்குக் கடையில் அரிசிவாங்கச் சென்ற போதுதான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தாள். மாவட்ட கலாச்சாரப் பேரவை சிறுகதைப் போட்டி ஒன்றை நடந்துவதற்காக விளம்பரம் செய்திருந்தது.
மனதில் ஒரு ஆசை முளையிட்டது.
அடிப் பெட்டியில் போட்டிருந்த நிறைவு செய்யப்படாத கதையொன்றை எடுத்து அதைப்பூரணப்படுத்தி அனுப்புவதற்காக அவள்பட்ட பாடுகள்............
அவள் எழுதிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்த குழந்தை முகுந்தன் பாலுக்கழுதது. பால்கொடுத்து அதனைத் தூங்க வைத்து விட்டு எழுதத் துவங்கிய போது, எழுதிவைத்த தாள்களை மூத்தமகன் முரளி எடுத்துக் கசக்கிக் கப்பல் செய்து கொண்டிருந்தான். எரிச்சலில் அவன் முதுகில் இரண்டு வைக்க அவன் வீரிட்டழ திடுக்கிட்டெழுந்து தத்தி ஓடி வந்த சின்னன் கதை எழுதி வைத்திருந்த ஏனைய தாள்களிலும் சிறுநீர் கழித்துவிட... அவள் ஏசி உலுக்க இரண்டும் வீரிட்டுக் கதறிக் கச்சேரி பண்ணின. அவர்களைச் சமாதாப்படுத்துவதே போது போது மென்றாகிவிட்டது.
இனி,
.
சைக்கிளின் தள்ளாட்டம்
'எடியே! சோத்தைப் போடடி'
'கெதியாய்ப் படுக்கவாடி'
அடுத்த நாள்
காலைச் சாப்பாடு முடித்து ஜஸ்கிறீம் சைக்கிளை அனுப்பி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவூட்டி விளையாட விட்டுவிட்டு அவசர அவசரமாக உடுப்புகளைத் தோய்த்து உலரவிட்டபின் எழுதத் தொடங்க உட்கார்ந்தபோது....
முகந்தன் காற்சட்டையை நனைத்துப்போட்டு வீரிட்டுக் கதறினான். ஓடிப்போய் அவனைத்தூக்கிக் கழுவி உடுப்புமாற்றிப் பவுடர்போட்டுத் தொட்டலில் கிடத்தி ஆட்டிவிட்டுப் பேணையைத் தூக்கியபோது, வீட்டுச் சொந்தக்காரன் வாடகைப் பணத்தைத் தருமாறு தூஷண வார்த்தைகளால் அபிஷேகித்துத் தலைகுனிய வைத்தான்.
அவனைக் கெஞ்சி, தவணை சொல்லி அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது.
'ஏன், உன்ரை புருசன் உழைக்கிற காசு முழுவதும் குடிச்சுத் தூலைக்கிறாரோ? இல்லாட்டி வேறு வைப்பாட்டி இருக்கோ? வீட்டுக்காரன் என்ன கேள்வியெல்லாம்... சீ........... தூஷணம்கூடம் பேசிவிட்டுப் போறான். அயலட்டைச் சனம் சிரிக்குது"
பக்கத்து வீட்டு பார்வதிக் கிழவி விண்ணாணமாக விசாரித்து இன்னுமின்னும் எரிச்சலை மூட்டிவிட்டுப் போனாள்.
'இந்தக் குடிகாரனோடு நரக வாழ்க்கை வாழவேணுமென்பது என்ரை தலையெழுத்தாய்ப் போச்சு' வெளியே சொல்ல முடியாமல் அவள் மனம் குமைந்தது. அன்றும் கதையை எழுதி முடிக்க முடியவில்லை.
மாலையில் வழமைபோல சைக்கிள் தள்ளாட்டம்.
'பசி வயித்தைக் கிள்ளுது சோத்தைப் போடடி"
சோற்றுத் தட்டை அவன் முன்னே வைத்துவிட்டு வாடகைக் காசுக்காக வீட்டுக்காரன் வந்து ஏசிப்போனதைச் சொன்னாள் புனிதா.
'வாடகை கேட்க வந்தவனோ உன்னோடை சரசமாட வந்தவனோ?" வாய் உழற வார்த்தைகளைக் கொட்டினான்.
'சே! எளிய மனிசா! என்ன சொல்லுறாய்? வாடகை காசு கொடுக்க வக்கில்லை. உனக்கு வீடென்ன குடும்பமென்ன?" சீற்றத்துடன் புதிதா கத்தினாள்.
சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து விட்டுத்துள்ளி எழுத்தவன் அவள் கன்னங்களிலும் உடம்பிலும் கோபம் தீரும்வரை அறைந்தான். குழந்தைகள் வீரிட்டுக் கத்தின.
அவனது அட்டகாசத்தைக் கேட்ட அயலவர்களின் தலைகள் வேலிக்கு மேலாய் எட்டி விடுப்புப் பார்த்தன.
குழந்தைகளை அணைத்தபடி அவள் இரவு முழுவதும் விம்மிக் கொண்டேயிருந்தாள்.
நிறைவெறியில் அவன் உடுத்திருந்த சாரம் கழன்றது கூடத் தெரியாமல் அவன் உறங்கிப் போனான்.
காலையில் எழுத்து பார்த்தபோது சைக்கிளுடன் அவன் நேரகாலத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டான்.
விசுக்கோத்தையும் பாலையும் கொடுத்துப் பிள்ளைகளைச் சமாளித்து விட்டு உடம்பு வலிதீர அவள் நோ எண்ணெய் தடவி விட்டுப் படுத்துக் கிடந்தாள்.
மாலையில் சைக்கிள் நிதானமாக வந்து நின்றது. தள்ளாட்டமில்லை.
'முரளி நான் வெளியே சாப்பிட்டு விட்டன் உங்களுக்கு இடியப்பப் பார்சல் வாங்கியிருக்கு, 300 வைச்சிருக்கு நாளைக்கு வீட்டு வாடகையைக் குடுத்திடச் சொல்லு"
அவன் போய்ப் படுத்து உறங்கி விட்டான்.
இலக்கியப் போட்டி இறுதிநாளுக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன! எப்படியும் நாளைக்கு எழுதி முடித்து அனுப்புவதென்ற வைராக்கியத்துடன் குழந்தைகளை அணைத்தபடி அவளும் உறங்கிவிட்டாள்.
ரொட்டியையும் தேநீரையும் காலை உணவாக அவனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டு, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, முரளியை அயலிலுள்ள நேர்சரிக்கு அனுப்பிவிட்டு முகுந்தனுக்கு சோற்றைக் கரையல் செய்து ஊட்டித் தொட்டிலில் போட்டுவிட்டு, மத்தியானத்துக்கு முன்பே கதையை எழுதி முடித்துவிட்டாள். திரும்பித்திரும்பி இருதடவைகள் படித்துப் பார்த்தாள்.
மனதிற்குத் திருப்தியாக இருந்தது. அன்றே தபாலில் சேர்த்துவிட்டாள்.
'அம்மா, தபால் அங்கிள் வாசலில் நிற்கிறார்"
கிறுக்கிக் கொண்டிருந்த கலர்ப் பென்சில்களை வீசி எறிந்து விட்டுப் படலையை நோக்கி முரளி ஓடிச் சென்ற போதுதான் அவரின் நீண்ட சிந்தனை கலைந்தது.
வானத்தில் மப்பிட்ட மேகக் கூட்டங்களைக் கண்டதால் போலும் எங்கோ ஒரு குயில் கூக்கூ.........கூக்கூ...... என்று குதூகலித்தது.
வேப்பமரத்தில் அதுவரை முடங்கியிருந்த காகங்கள் கூட 'காகா" என்றபடி சிறகடித்துப் பறந்தன!
முரளி கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தபோது அவள் உள்ளத்தில் மகிழ்ச்சிப்பூ விரிந்து நிறைந்தது!
'முரளி! உன்ரை அம்மாவுக்கு முதற் பரிசெடா கண்ணே! என அவனை அணைத்து உச்சியெல்லாம் முத்தமிட்டுத் தனது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
அன்று மாலை வேதாளம் தள்ளாடிக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்றது.
'சோத்தைப் போடடி"
தட்டில் சோறு கறியைப் பரிமாறி வைத்தாள்.
அருகே உட்கார்ந்தபடி தனக்குப் பரிசு கிடைத்திருக்கும் செய்தியையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதனைப் பெற்றுக் கொள்வதற்காகப் பட்டணத்துக்குப் போக வேண்டும் என்பதையும் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
'அதென்னடி பரிசு கிரிசென்று அலட்டுறாய்! அக்கறையின்றி உளறியவன் அடுத்துக் கேட்டான்.
'காசும் தருவாங்களோ?"
'ஓம்' என்றாள் அவள்.
'எவ்வளவு'
'அது தெரியாது
அப்படியே, அப்பசரி ஞாயிற்றுக் கிழமைதானே! பார்வதிக் கிழவியிடம் குழந்தையைப் பாத்துக்கொள்ளும்படி விடு: நீ மூத்தவனைக் கூட்டிக் கொண்டுபோ.
பக்குவமாக் காசை வாங்கிக் கொண்டு வா: காசு கவனம்" வெறியையும் மீறிக் கொண்ட அவனுக்குள் ஒரு சிரிப்பு!
விழா மண்டபத்தின் வாசலை நெருங்கியபோது, அது கலியாணக் களை கொண்டிருந்தது.
வாசலில் பழக்குலையோடு வாழை மரங்கள்!
மாவிலை தோரணம்!
கலாச்சாரப் பெருவிழா என்ற பதாகை. ஒலிபெருக்கியில் இதமான நாதஸ்வர இசை.
வாசலில் அழகிய கோலம் நிறைகுடம். சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்கும் இரு இளம் பெண்கள். அந்தப் பெண்களிடம் அழைப்பிதழைக் காட்டினாள்.
அவர்களில் ஒருத்தி புனிதாவைக் கூட்டிச் சென்று முதல்வரிசை ஆசனத்தில் இருத்தினாள்.
மேடையில் வரிசையாக இருபுறமும் பூஞ்சாடிகள். மண்டபத்துக்கு வண்ண வண்ணமாகக் கடதாசிக் சோடனைகள்! பலூன்கள்!
பிரதம விருந்தினரான மாவட்ட மந்திரி நேரத்துக்கே வந்துவிட்டதால், அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பகல் 10 மணிக்கே மங்கள விளக்கேற்றலுடன் விழாத் தொடங்கியது.
அரசாங்க அதிபர் வரவேற்புரை, பிரதம அதிதிஉரை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.
'சிறுகதை - முதல் பரிசு திருமதி புனிதா"
அறிப்பாளரின் கம்பீரக்குரல் மண்டபமெங்கும் ஒலித்தது! இரு இளம் பெண்கள் அவளருகில் வந்து, மேளம் கொட்ட அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
புனிதாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆனந்தப் படபடப்பு! சரஸ்வதி விருது, பரிசுப் பணம் ஜயாயிரம் ரூபா சான்றிதழ், பொன்னாடை, பூமாலை இவற்றைப் பெற்றுக் கொண்டபோது சபையில் எழுந்த கரகோஷப் பாராட்டு அவளைச் சிலிர்க்க வைத்தது!
மேடையிலிருந்து மகிழ்ச்சிபொங்க இறங்கிவந்து அவள் கீழே உட்கார்ந்து போது அவள் மகன் முரளி அவளது காதுக்குள் அச்சா அம்மா! கெட்டிக்காரி எனக்கு சரியான புழுகம்..........! 'என்றெல்லாம் தன் பிஞ்சு மொழியில் தாயை மேலும் குளிர வைத்தான்.
மகிழ்வால் அவள் பூரித்தாள்.
'அம்மா நான் இந்தச் சரஸ்வதி சாமியைப் படிக்கிற மேசையில் வைச்சு ஒவ்வொரு நாளும் விளக்குக் கொழுத்திக் கும்பிடப் போறன்". அந்தச் சின்ன உள்ளமும் கற்பனையில் மிதந்தது.
சரஸ்வதி தோற்றத்திலான அவ்விருதைத் தாயிடமிருந்து வாங்கி உற்று உற்றுப் பார்த்து ஆசையோடு அதனைத் தொட்டுத் தடவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உள்ளத்தின் பெருமை, புனிதாவைப் பரவசப்படுத்தியது.
பஸ்பிடித்து வீடுவந்து சேர 2 மணியாகிவிட்டது. இனித்தான் சமைக்க வேண்டும்.
திண்ணையில் சிகரெட் புகைத்தபடி இருந்த சிவனேசன், அவள் கொண்டு வந்த பையைப் பறித்துத் துளாவினான்.
'சரஸ்வதி விருது", சான்றிதழ், ஆகியவற்றை அலட்சியமாகத் திண்ணையில் போட்டுவிட்டு என்வலப்பை அவசரமாகப் பிரித்துப் பார்த்து 'ஓ! ஜயாயிரமோ நல்லதாய்ப்போச்சு! என்ரை வியாபாரத்தை விஸ்தரிக்க எனக்கு அவசரமாகத் தேவை" என்றபடி தனது சட்டைப் பையுள் திணித்துக் கொண்டான்.
'கெதியாய்ச் சமை நான் வெளியே போட்டுவாறான்" அவன் சைக்களில் புறப்பட்டுவிட்டான்.
திண்ணை அருகேயிருந்த வேப்பமரத்திலிருந்த ஒரு காகம் அனுங்கியபடி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைத் தூரத்தி வந்த கொழுத்த அண்டங்காகம், அதன் ஈனஸ்வரக் கத்தலையும் பொருட்படுத்தாமல் தடித்த கருஞ் சொண்டுகளால் கொத்திக் கொத்தி...........
முரளி அதைப்பார்த்துப் பயத்தால் சரஸ்வதி சிலையையும் சான்றிதழையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.
புனிதா உடுப்பை மாற்றிக் கொண்டு சமைப்பதற்காக அடுப்பை மூட்டினாள்.
'ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்ப நிறுவனத்தில் பெண்ணின் கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியை உயிரும் உணர்வுள்ள சக மனுஷியாக அல்லாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல நடத்தும் ஆண்நாயகப் போக்கு சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படும்வரை பெண்களுக்கு விடிவேயில்லை."
கருத்தரங்கில் கேட்ட குரல் புனிதாவின் காதுகளில் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் ஒலித்தது!
அந்த அடுப்பு மெல்ல மெல்ல மூண்டு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.
- ஞானம் -
நன்றி - சூரியன்.கொம்
Saturday, March 06, 2004
எதிர்வினை
படுதலம் சுகுமாரன்
அர்ச்சனா, வீட்டுக்குள் நுழையும்-போதே, ராம்பிரசாத்தின் கழுகுப் பார்வை, அவள் கொண்டு வந்த துணிப்பை மீது விழுந்தது. அவள் முழுவதுமாக உள்ளே வருவதற்குள் கேள்வி தோட்டா சீறியது.
""என்ன பையில?...''
""புடவை'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் அர்ச்சனா.
பின்னாடியே விரட்டிக் கொண்டு வந்தான்.
""யாருக்கு?...''
""இதென்ன கேள்வி.... புடவையை யார் கட்டுவாங்க?...''
""இந்த எதிர்கேள்வியெல்லாம் வேண்டாம். கேட்டதுக்கு பதில். இப்ப தீபாவளியுமில்ல, புத்தாண்டுமில்லை. பொங்கலும் முடிஞ்சிருச்சி. ஒரு விசேஷமுமில்லாத நேரத்துல புடவை எதுக்கு?...''
என்று கேட்டபடி, பையிலிருந்து புடவையை எடுத்து, விலை வில்லையை பார்த்தவன் கண்களை விரித்தான்.
""எழுநூற்றைம்பதா?...'' என்று பாய்ந்து அவளை மறித்துக் கொண்டு நின்றான்.
""எட்டு மணி நேரம் ஆபீஸ்ல மாரடிச்சுட்டு வந்து நிக்கறேன். களைச்சுப் போய் வந்திருக்கேன். புடவை மாத்திகிட்டு, முகம் கழுவிகிட்டு வந்துடறனே....
அவசரமா ஒண்ணுக்கு போகணும் நான்...''
கோபமும் வெறுப்பும் பின்ன, கணவனை ஏறிட்டு கேட்டுக் கொண்டு உள் அறைக்குள் போனாள் அர்ச்சனா.
"என்ன நினைச்சுகிட்டுருக்கிறாள் அவள். மாசக் கடைசி. பெட்ரோலுக்கும் காசில்லாமல், நானே கம்பெனிக்கு சைக்கிள்ல போய்ட்டு வந்து-கிட்டிருக்கேன். ஏதுங்கெட்ட நேரத்துல இவளுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்ல புதுப்புடவை கேட்குதோ.... வரட்டும்...''
என்று நாற்காலி முனையில் உட்கார்ந்து, பதட்டமாய் நகம் கடித்தான் பிரசாத்.
அஞ்சு நிமிஷம் கழித்து, முகம் அலம்பி, புடவை மாற்றிக் கொண்டு டீ போட்டுக் கொண்டு வந்த அர்ச்சனா.... ஒரு கோப்பையை ராம்பிரசாத்துக்கு கொடுத்தாள்.
அதை அவன் வாங்காமலே,
""இதுக்கு முதல்ல பதில் சொல்லு...'' என்று துணிப்பையைக் காட்டினான்.
""என்னங்க.... ஒரு புடவையை வீட்டுக்குள்ள கொண்டு வந்ததுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணணுமா?... கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கக் கூடாதா! நானே சொல்ல மாட்டேனா.... பூனைக்குட்டியை கழுத்தைப் பிடிச்சுத் தூக்கினாப்ல நெருக்கறீங்களே.....''
""லுக்... இந்த பெருந்தன்மைங்கிற வார்த்தையை உடைப்பில போடு. உங்க வம்சத்துக்கே பொருந்தாத வார்த்தை அது. உங்கப்பா கல்யாணத்துக்கு முன்ன இதைத் தர்ரேன், அதைத் தர்ரேன்னு வாக்கு கொடுத்துட்டு, கழுத்துல தாலி ஏறினதும் கையை விரிச்சிட்டான். கடைசில, பொண்ணு வேலைக்குப் போகுது. மாசம் எண்ணாயிரம் வீதம், வருஷத்துக்கு போனசும் சேர்த்து லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறாளே.... இதுக்கு மேல என்ன வேணும் மாப்பிள்ளை?'னு அல்வா கொடுத்தாரு. உங்க குடும்பத்து பெருந்தன்மை அது... எனக்கு பெருந்தன்மை பத்திச் சொல்ல வந்துட்டியா?...''
""எங்க குடும்பத்தை ஏன் இழுக்கறீங்க. எங்க அப்பா சொன்னதுல என்ன தப்பு. நான் சம்பாதிச்சுத் தரலையா என்ன?''
""நல்லா சம்பாரிச்சே.... சம்பளப் பட்டியல்லதான் கணக்கு எட்டாயிரம். கைக்கு வர்றதென்னவோ... பாதிகூட இல்லை....''
""மீதியை நான் விழுங்கறேனா... அல்லது எங்க குடும்பத்துக்கு அனுப்பறேனா.... சம்பளம் வாங்கினதும் முதல் காரியமாய் நீங்கள் வாங்கின மோட்டார் சைக்கிளுக்கும், உங்க பேர்ல போட்டிருக்கிற இன்சூரஸ் பாலிசிக்கும் உங்க பேர்ல வங்கியில உள்ள ரெகரிங் டெபாசிட்டுக்கும் தவணை கட்டிட்டுத்தானே வீட்டுக்கு வர்ரேன்.... அதெல்லாம் என்னவாம்?...''
""அது ஒண்ணு போதுமா.... மாசா மாசம் பவுடருக்கும், பொட்டுக்கும், வளையல் அந்த தைலம் பவுடர். இந்த எண்ணெய்னு கணிசமா ஒரு தொகை போய்கிட்டிருக்கே. மாசத்துக்கு ஒரு ஜோடி செருப்பு, வருஷத்துக்கு நாலு வானிடிபேக், பண்டிகை தப்பாம புதுப்புடவை... போதாக்குறைக்கு வயித்தெரிச்சல்... எளநி சாப்பிட்டேன். வெயில் தாங்கலை... கூல் ட்ரிங்ங்ஸ் சாப்பிட்டேன், டயம் ஆயிருச்சு ஆட்டோவுல போனேன்னு தினசரி பேட்டா வேற....''
அவன் அடுக்கிக் கொண்டே போக, அர்ச்சனாவுக்கு அவமானமாக இருந்தது.
""என்னங்க பண்றது. நான் வீட்டோடு இருக்கிறவளாயிருந்தால் இந்த செலவுக்கு அவசியமே இருக்காது. தலையெழுத்து. வேலைக்கு போக வேண்டியிருக்கு. நாலுபேருக்கு மத்தியில வேலை செய்யும்போது கொஞ்சம் நாகரீகமாய் இருக்க வேணாமா....''
""யார் வேணாம்னது. அதுக்காக மாசம் ஒரு புடவை வாங்கணுமா? டி.வி.ல நியூஸ் வாசிக்கிறவகிட்டகூட இத்தனை வெரைட்டி இருக்காது. ஆஃப்ட்ரால், குமாஸ்தா வேலை பாக்குற உனக்கு பதினெட்டு புடவை...''
அர்ச்சனா வெடித்தாள்.
""கணக்கு பார்த்து வச்சாச்சா... எண்ணிக்கை புடவைக்கு மட்டும்-தானா. ஜாக்கெட், உள்ளாடை-களுக்குமா?....''
""ஏன்.... அதெல்லாம் காசு போட்டு வாங்கினதுதானே...'' என்ற பிரசாத், ""சொல்லு.... இப்ப.... எதுக்கு புதுப்புடவை?'' என்றான் விடாப்-பிடியாய். ""பிடிக்கலைனா கொளுத்திப் போடுங்க. நாளைக்கு இந்த பாவிக்குப் பிறந்த நாள். ஆபீஸ்ல ஒவ்வொருத்-தியும் அவளவள் பிறந்த நாளைக்கு விதம் விதமா உடுத்தறாங்க. அவங்க புருஷன்மார் அன்பாவும், பாசமாவும் வாங்கித் தர்ராங்க. புடவை மட்டுமில்லே... நகை, பரிசு பொருள்னு பலதும் வாங்கித் தர்றாங்க. அதைப் போட்டுட்டு வந்து பெருமைப் பட்டுக்கறாங்க. "என் புருஷன் மத்தவங்களைப் போýல்லை.... வித்யாசமானவரு. பரிசை பொருளாய் கொடுத்தால் அது கால ஓட்டத்துல பழசாய்ப் போயிரும்னு... தன் இதயத்தையே கொடுத்திருக்கார்னு' சொல்ýக்க முடியுமா. என் கெüரவத்தை காப்பாத்திக்க உங்களை பெருமையாய் சொல்ýக்க வச்சி-ருக்கேனே... அதற்காகவாவது, நானாகவே ஒன்னை உடுத்திக்கிட்டு போக வாணாமா?...''
என்று கண்களில் நீர் திரள, அர்ச்சனா சொன்னபோதும்,
""இந்த பிறந்த நாள் கொண்டாடறதெல்லாம் நம்ம கலாச்சாரத்திலேயே கிடையாது. வாங்கிப் பூட்டிக்க இதெல்லாம் ஒரு சாக்கு'' என்றான் ராம் பிரசாத், புடவை பார்சலை விட்டெறிந்து.
அர்ச்சனாவுக்கு, இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. முள் படுக்கை-யில் விழுந்தது போல் இருந்தது.
வேதனை, பிடுங்கித் தின்றது.
என்ன புருஷன் இவன்...
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும், மரத்திலும் நெகிழ்வு இருக்கும்.
இவன் வறண்டு வெடித்த பாலையாய், எரிமலைக் கரியாய் இருக்கிறானே.
இரண்டு வருட தாம்பத்யமே இப்படி வேம்பாய் கசக்க வைக்கிறானே...
மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாத கல்நெஞ்சன்.
தன் கையால் புடவை.... வேண்-டாம்... ஒரு முழம் பூகூட வாங்கித் தந்து அறியாதவன். மனைவி தானே ஒரு புடவை.... ஆசைப்பட்டுக் கூட அல்ல.... அவசியத்தை முன்னிட்டு ஒரு புடவை வாங்கி வந்தால், கொஞ்சம்-கூட புரிந்து கொள்ளாமல், இங்கித-மின்றிப் பேசுபவனை என்ன செய்ய...?
""பையனுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லை. உறவுன்னு இருக்கிறது அண்ணன் மட்டும்தான். அவரும் பம்பாய்ல குடும்பத்தோடு செட்டிலாய்ட்டாராம். புகுந்த வீட்டில், உனக்கு ஒரு தொல்லையும் இருக்காது'' என்று தப்புக் கணக்குப் போட்ட அப்பாவை இப்போது கட்டி வைத்து கேள்வி கேட்கணும் போýருந்தது.
மாமியார் இல்லாத வீடு....
நாத்தனார் இல்லாத வீடு....
உறவுகள் இல்லாத வீடென்றால்.... மகள் சுகமாயிருந்துவிடுவாள் என்று எதன் அடிப்படையில் தீர்மானிக்கி-றீர்கள் பெற்றோர்களே...
அவர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்துவார்களா?
அன்பற்ற, புரிதல் இல்லாத புருஷன் வாய்த்துவிட்டால், ஒரு பெண்ணுக்கு அதைவிடக் கொடுமை வேறென்ன வேண்டும்.
கொண்டவன் சரியாக இருந்தால் கூரை ஏறிச் சண்டையிடலாம்.
மனைவியை, அதுவும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய், சம்பளமில்லாத வேலைக்காரியாக மட்டும் பார்க்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பெண், என்ன சுகம் பெறுவாள்..... என்று இராவெல்லாம் கண்களில் சுடுநீர் விட்டு கவலைப்பட்டவள், விடியலில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள். காலையில் ராம்பிரசாத், கம்பெனிக்கு கிளம்புகையில் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்து, ""இதை என் ஆபீஸ்ல கொடுத்திடுங்க...'' என்றாள்.
""என்ன இது லீவ் லெட்டரா.... உடம்புக்கு என்ன.... நல்லாத்தானே இருக்கே. தேவையில்லாத நேரத்துல எதுக்கு லீவு போடணும். அனாவ-சியமா ஒருநாள் சம்பளம் கட்டாகுமே....'' என்றான்.
""இது லீவ் லெட்டர் இல்லைங்க...''
""பின்னே?''
""ராஜினாமா கடிதம்....''
""ரா...ஜி...னா...மா... கடிதமா?... உனக்-கென்ன பைத்தியமா?'' ராம்பிரசாத் திகைத்துப் போய்க் கேட்டான். அர்ச்சனா, நிதானமாய் பதில் சொன்னாள். ""நான் நல்லா யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். பெண்கள் வேலைக்குப் போறதே, அவர்களது தேவைகளுக்கு யாரையும் எதிர்-பார்க்காமல், சுதந்திரமாய்த் தன் காýல் நிற்கறதுக்குதான். சம்பாதிச்சும், ஒரு புடவை எடுக்க, பொட்டு, பவுடர், வளையல் வாங்கவும்கூட பேராட வேண்டியிருக்குன்னா... அதுக்கு ஏன் சம்பாத்யம். வீட்ல இருக்குற பெண்களுக்கு இதைவிட அதிகமாய் கேட்காமலே கிடைக்குது. நான் ஏன் மெனக்கெட்டு உழைச்சும், உங்ககிட்ட நல்ல பேர் வாங்க முடியாம, வேதனைப் படணும். வேலைக்குப் போறதாலதான நாலுவகை புடவையும் இன்னும் பல செüகர்யமும் தேவைப்படுது. வீட்ல இருந்துவிட்டால் ஏதோ நீங்க வாங்கித் தந்ததைக் கட்டிக்கிட்டு, பொங்கிப் போட்டுக்கிட்டு, டி.வி. பார்த்துக்கிட்டு, அக்கம்பக்கம் கதை பேசிகிட்டு, நிம்மதியா இருப்பேன் பாருங்க. உங்களுக்கும் என்னோடு சண்டை சச்சரவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை பாருங்க... அதான் இந்த முடிவு.... லெட்டரைக் கொடுத்துட்டு, பி.எஃப்., கிராஜ÷விட்டி எப்ப கிடைக்கும்னு விசாரிச்சுட்டு வாங்க....'' என்று உள்ளே போனாள்.
ராம்பிரசாத்துக்கு, கால்கள் துவண்டது. உடம்பு நடுங்கியது. விரல்கள் படபடத்தது. எதிர்காலமே இருண்டது போலாகிவிட்டது. அவள் மட்டும் வேலைக்குப் போகா-விட்டால்,
இன்சூரன்ஸ் தவணை, பைக் வாங்கின தவணை, வங்கித் தவணை, ப்ளாட் வாங்க போட்டிருக்கும் திட்டம்.... மேலும் அன்றாடச் செலவுக்குப் பணம்.... என் ஒற்றைச் சம்பளம் எந்த மூலைக்கு காணும்.... கடவுளே.... இதென்ன விபரீதம்.... சைக்கிளைப் போட்டுவிட்டு, ""அர்ச்சனா.... அர்ச்சனா.... ப்ளீஸ்.... இதென்ன அபத்தமான முடிவு.... ஆப்ட்ரால் ஒரு புடவை பிரச்சனைக்கு இவ்வளவு கோபப்படணுமா... நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கக் கூடாதா... நானே இன்னைக்கு இன்னொரு புடவை எடுத்து தரலாம்னு இருந்தேன் தெரியுமா.... அர்ச்சனா.... அர்ச் கண்ணு...'' என்று கெஞ்சிகொண்டு வீட்டுக்குள் ஓடினான் ராம்பிரசாத்.
Nantri - Kalachuvadu
அர்ச்சனா, வீட்டுக்குள் நுழையும்-போதே, ராம்பிரசாத்தின் கழுகுப் பார்வை, அவள் கொண்டு வந்த துணிப்பை மீது விழுந்தது. அவள் முழுவதுமாக உள்ளே வருவதற்குள் கேள்வி தோட்டா சீறியது.
""என்ன பையில?...''
""புடவை'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் அர்ச்சனா.
பின்னாடியே விரட்டிக் கொண்டு வந்தான்.
""யாருக்கு?...''
""இதென்ன கேள்வி.... புடவையை யார் கட்டுவாங்க?...''
""இந்த எதிர்கேள்வியெல்லாம் வேண்டாம். கேட்டதுக்கு பதில். இப்ப தீபாவளியுமில்ல, புத்தாண்டுமில்லை. பொங்கலும் முடிஞ்சிருச்சி. ஒரு விசேஷமுமில்லாத நேரத்துல புடவை எதுக்கு?...''
என்று கேட்டபடி, பையிலிருந்து புடவையை எடுத்து, விலை வில்லையை பார்த்தவன் கண்களை விரித்தான்.
""எழுநூற்றைம்பதா?...'' என்று பாய்ந்து அவளை மறித்துக் கொண்டு நின்றான்.
""எட்டு மணி நேரம் ஆபீஸ்ல மாரடிச்சுட்டு வந்து நிக்கறேன். களைச்சுப் போய் வந்திருக்கேன். புடவை மாத்திகிட்டு, முகம் கழுவிகிட்டு வந்துடறனே....
அவசரமா ஒண்ணுக்கு போகணும் நான்...''
கோபமும் வெறுப்பும் பின்ன, கணவனை ஏறிட்டு கேட்டுக் கொண்டு உள் அறைக்குள் போனாள் அர்ச்சனா.
"என்ன நினைச்சுகிட்டுருக்கிறாள் அவள். மாசக் கடைசி. பெட்ரோலுக்கும் காசில்லாமல், நானே கம்பெனிக்கு சைக்கிள்ல போய்ட்டு வந்து-கிட்டிருக்கேன். ஏதுங்கெட்ட நேரத்துல இவளுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்ல புதுப்புடவை கேட்குதோ.... வரட்டும்...''
என்று நாற்காலி முனையில் உட்கார்ந்து, பதட்டமாய் நகம் கடித்தான் பிரசாத்.
அஞ்சு நிமிஷம் கழித்து, முகம் அலம்பி, புடவை மாற்றிக் கொண்டு டீ போட்டுக் கொண்டு வந்த அர்ச்சனா.... ஒரு கோப்பையை ராம்பிரசாத்துக்கு கொடுத்தாள்.
அதை அவன் வாங்காமலே,
""இதுக்கு முதல்ல பதில் சொல்லு...'' என்று துணிப்பையைக் காட்டினான்.
""என்னங்க.... ஒரு புடவையை வீட்டுக்குள்ள கொண்டு வந்ததுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணணுமா?... கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கக் கூடாதா! நானே சொல்ல மாட்டேனா.... பூனைக்குட்டியை கழுத்தைப் பிடிச்சுத் தூக்கினாப்ல நெருக்கறீங்களே.....''
""லுக்... இந்த பெருந்தன்மைங்கிற வார்த்தையை உடைப்பில போடு. உங்க வம்சத்துக்கே பொருந்தாத வார்த்தை அது. உங்கப்பா கல்யாணத்துக்கு முன்ன இதைத் தர்ரேன், அதைத் தர்ரேன்னு வாக்கு கொடுத்துட்டு, கழுத்துல தாலி ஏறினதும் கையை விரிச்சிட்டான். கடைசில, பொண்ணு வேலைக்குப் போகுது. மாசம் எண்ணாயிரம் வீதம், வருஷத்துக்கு போனசும் சேர்த்து லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறாளே.... இதுக்கு மேல என்ன வேணும் மாப்பிள்ளை?'னு அல்வா கொடுத்தாரு. உங்க குடும்பத்து பெருந்தன்மை அது... எனக்கு பெருந்தன்மை பத்திச் சொல்ல வந்துட்டியா?...''
""எங்க குடும்பத்தை ஏன் இழுக்கறீங்க. எங்க அப்பா சொன்னதுல என்ன தப்பு. நான் சம்பாதிச்சுத் தரலையா என்ன?''
""நல்லா சம்பாரிச்சே.... சம்பளப் பட்டியல்லதான் கணக்கு எட்டாயிரம். கைக்கு வர்றதென்னவோ... பாதிகூட இல்லை....''
""மீதியை நான் விழுங்கறேனா... அல்லது எங்க குடும்பத்துக்கு அனுப்பறேனா.... சம்பளம் வாங்கினதும் முதல் காரியமாய் நீங்கள் வாங்கின மோட்டார் சைக்கிளுக்கும், உங்க பேர்ல போட்டிருக்கிற இன்சூரஸ் பாலிசிக்கும் உங்க பேர்ல வங்கியில உள்ள ரெகரிங் டெபாசிட்டுக்கும் தவணை கட்டிட்டுத்தானே வீட்டுக்கு வர்ரேன்.... அதெல்லாம் என்னவாம்?...''
""அது ஒண்ணு போதுமா.... மாசா மாசம் பவுடருக்கும், பொட்டுக்கும், வளையல் அந்த தைலம் பவுடர். இந்த எண்ணெய்னு கணிசமா ஒரு தொகை போய்கிட்டிருக்கே. மாசத்துக்கு ஒரு ஜோடி செருப்பு, வருஷத்துக்கு நாலு வானிடிபேக், பண்டிகை தப்பாம புதுப்புடவை... போதாக்குறைக்கு வயித்தெரிச்சல்... எளநி சாப்பிட்டேன். வெயில் தாங்கலை... கூல் ட்ரிங்ங்ஸ் சாப்பிட்டேன், டயம் ஆயிருச்சு ஆட்டோவுல போனேன்னு தினசரி பேட்டா வேற....''
அவன் அடுக்கிக் கொண்டே போக, அர்ச்சனாவுக்கு அவமானமாக இருந்தது.
""என்னங்க பண்றது. நான் வீட்டோடு இருக்கிறவளாயிருந்தால் இந்த செலவுக்கு அவசியமே இருக்காது. தலையெழுத்து. வேலைக்கு போக வேண்டியிருக்கு. நாலுபேருக்கு மத்தியில வேலை செய்யும்போது கொஞ்சம் நாகரீகமாய் இருக்க வேணாமா....''
""யார் வேணாம்னது. அதுக்காக மாசம் ஒரு புடவை வாங்கணுமா? டி.வி.ல நியூஸ் வாசிக்கிறவகிட்டகூட இத்தனை வெரைட்டி இருக்காது. ஆஃப்ட்ரால், குமாஸ்தா வேலை பாக்குற உனக்கு பதினெட்டு புடவை...''
அர்ச்சனா வெடித்தாள்.
""கணக்கு பார்த்து வச்சாச்சா... எண்ணிக்கை புடவைக்கு மட்டும்-தானா. ஜாக்கெட், உள்ளாடை-களுக்குமா?....''
""ஏன்.... அதெல்லாம் காசு போட்டு வாங்கினதுதானே...'' என்ற பிரசாத், ""சொல்லு.... இப்ப.... எதுக்கு புதுப்புடவை?'' என்றான் விடாப்-பிடியாய். ""பிடிக்கலைனா கொளுத்திப் போடுங்க. நாளைக்கு இந்த பாவிக்குப் பிறந்த நாள். ஆபீஸ்ல ஒவ்வொருத்-தியும் அவளவள் பிறந்த நாளைக்கு விதம் விதமா உடுத்தறாங்க. அவங்க புருஷன்மார் அன்பாவும், பாசமாவும் வாங்கித் தர்ராங்க. புடவை மட்டுமில்லே... நகை, பரிசு பொருள்னு பலதும் வாங்கித் தர்றாங்க. அதைப் போட்டுட்டு வந்து பெருமைப் பட்டுக்கறாங்க. "என் புருஷன் மத்தவங்களைப் போýல்லை.... வித்யாசமானவரு. பரிசை பொருளாய் கொடுத்தால் அது கால ஓட்டத்துல பழசாய்ப் போயிரும்னு... தன் இதயத்தையே கொடுத்திருக்கார்னு' சொல்ýக்க முடியுமா. என் கெüரவத்தை காப்பாத்திக்க உங்களை பெருமையாய் சொல்ýக்க வச்சி-ருக்கேனே... அதற்காகவாவது, நானாகவே ஒன்னை உடுத்திக்கிட்டு போக வாணாமா?...''
என்று கண்களில் நீர் திரள, அர்ச்சனா சொன்னபோதும்,
""இந்த பிறந்த நாள் கொண்டாடறதெல்லாம் நம்ம கலாச்சாரத்திலேயே கிடையாது. வாங்கிப் பூட்டிக்க இதெல்லாம் ஒரு சாக்கு'' என்றான் ராம் பிரசாத், புடவை பார்சலை விட்டெறிந்து.
அர்ச்சனாவுக்கு, இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. முள் படுக்கை-யில் விழுந்தது போல் இருந்தது.
வேதனை, பிடுங்கித் தின்றது.
என்ன புருஷன் இவன்...
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும், மரத்திலும் நெகிழ்வு இருக்கும்.
இவன் வறண்டு வெடித்த பாலையாய், எரிமலைக் கரியாய் இருக்கிறானே.
இரண்டு வருட தாம்பத்யமே இப்படி வேம்பாய் கசக்க வைக்கிறானே...
மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாத கல்நெஞ்சன்.
தன் கையால் புடவை.... வேண்-டாம்... ஒரு முழம் பூகூட வாங்கித் தந்து அறியாதவன். மனைவி தானே ஒரு புடவை.... ஆசைப்பட்டுக் கூட அல்ல.... அவசியத்தை முன்னிட்டு ஒரு புடவை வாங்கி வந்தால், கொஞ்சம்-கூட புரிந்து கொள்ளாமல், இங்கித-மின்றிப் பேசுபவனை என்ன செய்ய...?
""பையனுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லை. உறவுன்னு இருக்கிறது அண்ணன் மட்டும்தான். அவரும் பம்பாய்ல குடும்பத்தோடு செட்டிலாய்ட்டாராம். புகுந்த வீட்டில், உனக்கு ஒரு தொல்லையும் இருக்காது'' என்று தப்புக் கணக்குப் போட்ட அப்பாவை இப்போது கட்டி வைத்து கேள்வி கேட்கணும் போýருந்தது.
மாமியார் இல்லாத வீடு....
நாத்தனார் இல்லாத வீடு....
உறவுகள் இல்லாத வீடென்றால்.... மகள் சுகமாயிருந்துவிடுவாள் என்று எதன் அடிப்படையில் தீர்மானிக்கி-றீர்கள் பெற்றோர்களே...
அவர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்துவார்களா?
அன்பற்ற, புரிதல் இல்லாத புருஷன் வாய்த்துவிட்டால், ஒரு பெண்ணுக்கு அதைவிடக் கொடுமை வேறென்ன வேண்டும்.
கொண்டவன் சரியாக இருந்தால் கூரை ஏறிச் சண்டையிடலாம்.
மனைவியை, அதுவும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய், சம்பளமில்லாத வேலைக்காரியாக மட்டும் பார்க்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பெண், என்ன சுகம் பெறுவாள்..... என்று இராவெல்லாம் கண்களில் சுடுநீர் விட்டு கவலைப்பட்டவள், விடியலில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள். காலையில் ராம்பிரசாத், கம்பெனிக்கு கிளம்புகையில் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்து, ""இதை என் ஆபீஸ்ல கொடுத்திடுங்க...'' என்றாள்.
""என்ன இது லீவ் லெட்டரா.... உடம்புக்கு என்ன.... நல்லாத்தானே இருக்கே. தேவையில்லாத நேரத்துல எதுக்கு லீவு போடணும். அனாவ-சியமா ஒருநாள் சம்பளம் கட்டாகுமே....'' என்றான்.
""இது லீவ் லெட்டர் இல்லைங்க...''
""பின்னே?''
""ராஜினாமா கடிதம்....''
""ரா...ஜி...னா...மா... கடிதமா?... உனக்-கென்ன பைத்தியமா?'' ராம்பிரசாத் திகைத்துப் போய்க் கேட்டான். அர்ச்சனா, நிதானமாய் பதில் சொன்னாள். ""நான் நல்லா யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். பெண்கள் வேலைக்குப் போறதே, அவர்களது தேவைகளுக்கு யாரையும் எதிர்-பார்க்காமல், சுதந்திரமாய்த் தன் காýல் நிற்கறதுக்குதான். சம்பாதிச்சும், ஒரு புடவை எடுக்க, பொட்டு, பவுடர், வளையல் வாங்கவும்கூட பேராட வேண்டியிருக்குன்னா... அதுக்கு ஏன் சம்பாத்யம். வீட்ல இருக்குற பெண்களுக்கு இதைவிட அதிகமாய் கேட்காமலே கிடைக்குது. நான் ஏன் மெனக்கெட்டு உழைச்சும், உங்ககிட்ட நல்ல பேர் வாங்க முடியாம, வேதனைப் படணும். வேலைக்குப் போறதாலதான நாலுவகை புடவையும் இன்னும் பல செüகர்யமும் தேவைப்படுது. வீட்ல இருந்துவிட்டால் ஏதோ நீங்க வாங்கித் தந்ததைக் கட்டிக்கிட்டு, பொங்கிப் போட்டுக்கிட்டு, டி.வி. பார்த்துக்கிட்டு, அக்கம்பக்கம் கதை பேசிகிட்டு, நிம்மதியா இருப்பேன் பாருங்க. உங்களுக்கும் என்னோடு சண்டை சச்சரவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை பாருங்க... அதான் இந்த முடிவு.... லெட்டரைக் கொடுத்துட்டு, பி.எஃப்., கிராஜ÷விட்டி எப்ப கிடைக்கும்னு விசாரிச்சுட்டு வாங்க....'' என்று உள்ளே போனாள்.
ராம்பிரசாத்துக்கு, கால்கள் துவண்டது. உடம்பு நடுங்கியது. விரல்கள் படபடத்தது. எதிர்காலமே இருண்டது போலாகிவிட்டது. அவள் மட்டும் வேலைக்குப் போகா-விட்டால்,
இன்சூரன்ஸ் தவணை, பைக் வாங்கின தவணை, வங்கித் தவணை, ப்ளாட் வாங்க போட்டிருக்கும் திட்டம்.... மேலும் அன்றாடச் செலவுக்குப் பணம்.... என் ஒற்றைச் சம்பளம் எந்த மூலைக்கு காணும்.... கடவுளே.... இதென்ன விபரீதம்.... சைக்கிளைப் போட்டுவிட்டு, ""அர்ச்சனா.... அர்ச்சனா.... ப்ளீஸ்.... இதென்ன அபத்தமான முடிவு.... ஆப்ட்ரால் ஒரு புடவை பிரச்சனைக்கு இவ்வளவு கோபப்படணுமா... நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கக் கூடாதா... நானே இன்னைக்கு இன்னொரு புடவை எடுத்து தரலாம்னு இருந்தேன் தெரியுமா.... அர்ச்சனா.... அர்ச் கண்ணு...'' என்று கெஞ்சிகொண்டு வீட்டுக்குள் ஓடினான் ராம்பிரசாத்.
Nantri - Kalachuvadu
Friday, March 05, 2004
பிளாஸ்டிக்
சுமதி ரூபன்
விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.
பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல்போத்தல் சாப்பாடு டயப்பர் வீணீர் துடைக்கும் துண்டு சூப்பி மாற்றுடுப்பு கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.
வியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள் வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்திருந்துகொண்டிருந்த என் பெட்டைகள்இ குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து கறுப்பு பாண்ஸ் கோட் கச்சிதமாய் இருந்தது.
வேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..”? நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக் கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.
“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை” ...........................
பக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வூய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்
“நீங்கள் மேகலா தானே”
அளவாக நானும் வாய் திறந்து
“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”
அகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..
அவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.
“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”
அவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.
“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”
சும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”
பொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..
“இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”
அவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா?” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்”; என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்
“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே
“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா?”
மனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.
வீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..
மசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..
எனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..
இன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..
ஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சூரிய ஒளி முகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..
சங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும்இ சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்காமல் கிடந்தது..
முள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..
“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”
ஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” எனக்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா அம்மா அக்காஇ ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று..
சோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி - பூகம்பம்இ அமைதி - பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..
மணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.
நான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..
நான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..
குட்டிச் சோறு காய்ச்சி விளையாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..
- சுமதி ரூபன் -
நன்றி - திண்ணை
விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.
பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல்போத்தல் சாப்பாடு டயப்பர் வீணீர் துடைக்கும் துண்டு சூப்பி மாற்றுடுப்பு கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.
வியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள் வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்திருந்துகொண்டிருந்த என் பெட்டைகள்இ குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து கறுப்பு பாண்ஸ் கோட் கச்சிதமாய் இருந்தது.
வேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..”? நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக் கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.
“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை” ...........................
பக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வூய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்
“நீங்கள் மேகலா தானே”
அளவாக நானும் வாய் திறந்து
“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”
அகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..
அவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.
“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”
அவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.
“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”
சும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”
பொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..
“இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”
அவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா?” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்”; என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்
“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே
“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா?”
மனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.
வீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..
மசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..
எனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..
இன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..
ஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சூரிய ஒளி முகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..
சங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும்இ சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்காமல் கிடந்தது..
முள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..
“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”
ஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” எனக்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா அம்மா அக்காஇ ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று..
சோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி - பூகம்பம்இ அமைதி - பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..
மணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.
நான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..
நான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..
குட்டிச் சோறு காய்ச்சி விளையாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..
- சுமதி ரூபன் -
நன்றி - திண்ணை
Sunday, February 22, 2004
சிலுவை
ஜெயகாந்தன்
டிரங்க் ரோட்டில் பேரிரைச்சலோடு அந்த பஸ் போய்க் கொண்டிருந்தது. தனக்கு நேர் எதிரில் மூன்று வரிசைகளுக்கு அப்பால் நான்காவது வரிசையில் சன்னலோரமாக உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் பக்கம் தன் பார்வை திரும்பக் கூடாது என்ற சித்த உறுதியுடன், ஓடுகின்ற பஸ்ஸின் சன்னல் வழியாக, சாலையோரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் கன்னிகா ஸ்தீரியின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது.
தலையில் புல்லுக் கட்டு இடுப்பிலிருக்கும் கைக்குழந்தை அந்த விவசாயப் பெண்ணின் திறந்த மார்பில் உறங்கிக் கொண்டிருந்தது. தாயிடம் பால் குடித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கும். சாய்ந்து வீசும் மாலைவெயில் கண்ணில் படாதவாறு ஒரு கையால் குழந்தையை அணைத்துக்கொண்டு மற்றொரு கையை நெற்றிக்கு நேரே பிடித்து, சாலையில் ஓடிவரும் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பஸ் கடந்த பின்தான் இந்தக் கன்னிகா ஸ்திரீ பார்க்க முடிந்தது. அந்த இரண்டு கன்னிகா ஸ்திரீகளுமே பஸ் போகிற பக்கம் அல்லாமல் பின் புறம் நோக்கி உட்கார்ந்திருந்தனர்.
அந்த விவசாயப் பெண், குழந்தையோடு நின்றிருந்த அந்தக் காட்சி, இந்த இளம் கன்னிகா ஸ்திரீக்கு என்ன சுகத்தைத் தந்ததோ - முகத்தில் ஒரு புதிய ஒளி வீச, சன்னலுக்கு வெளியே கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். நீலநிறத் தலையணி வஸ்திரம் கன்னத்தில் படபடத்தது. தன்னை இவள் பார்ப்பதை அறிந்த விவசாயப் பெண் புன்னகை பூத்தாள். இவளும் பதிலுக்குத் தலை அசைத்தாள்...
''கருவிலாக் கருத்தரித்துக்
கன்னித் தாயாகி
உருவிலானை மனித உருவினில்
உலகுக் களித்த...''
அவள் உதடுகள் முணுமுணுத்தன. மனசில், அந்த விவசாயப் பெண்ணின் தோற்றம், தங்கள் மடத்து வாயிலில் கையில் தெய்வ குமரனை அரவணைத்து நிற்கும் புனிதமேரிச் சிலைபோல் பதிந்தது. பார்வையில் அந்த விவசாயப் பெண்ணின் உருவம் மறைய மறைய, பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் பஸ்ஸின் போக்கில் திரும்பி மீண்டும் நான்காவது வரிசையில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் முகத்தில் வந்து நின்றது.
அவன் அவளையே - அந்தக் கன்னிகா ஸ்திரீயின் வட்ட வடிவமாய், நீலமும் கறுப்பும் கலந்த அங்கிக்கு வெளியே தெரியும் முகத்தை மட்டுமே - பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. கண்கள் படபடத்தன. சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
''ஏன்? அவன் அழகாகத்தானே இருக்கிறான் ! அழகு இருந்தால்? ... அதுதான் பாபம். பாபத்தின் விளைவு - பாபமூட்டைதான் ! மனித உரு உலகில் பிறப்பதே... பிறவியே... பாவத்தின் பலன்தானே? விலக்கப்பட்ட கனியை விரும்பித் தின்னாமலிருந்தால்.... ஆதாம் ஏவாளின் சந்ததி ஏது? ஆதாமும் ஏவாளும் பிதாவால் புனிதமாகப் படைக்கப்பட்டனர்.
''ஆனால் அவர்கள்? விலக்கப்பட்ட கனியை உண்டதன் பலனாய்ப் பாபிகளானார்கள். அவர்களது பாபத்தின் விளைவாய், ''இந்த மனிதர்கள் அனைவரும்... நானும், என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்களே ... யாரோ பெற்றெடுத்து எங்கோ எறிந்துவிட்டுப்போன மூன்றுநாள் வயதான அநாதைச் சிசுவான என்னை எடுத்து மடத்தில் சேர்த்து வளர்த்துத் தன்னைப்போல் ஒரு கிறிஸ்துவ கன்னிகா ஸ்திரீயாக்கிய என் தாய் இன்விலடாவும், சற்று நேரத்துக்கு முன்பார்த்த அந்தக் கிராமத்து ஏழைத் தாயும், அவள் கையிலிருந்த சிசுவும், அதோ என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றானே அந்த இளைஞன்...அவனும், பிறந்திருக்கிறார்கள். பாவிகள்... மனிதர்கள் பாவிகள் ! விலக்கப்பட்ட விஷக்கனியில் புழுத்த புழுக்கள் ! விரியன் பாம்புகள் !....
பஸ் கடகடத்து ஓடிக்கொண்டே இருந்தது.
அவள் கண்கள் மறுபடியும் பஸ்ஸிற்குள் திரும்பும்போது அந்த வாலிபன் மீது விழுந்து, உடனே விலகி மறுபடியும் திரும்பியபோது அவள் எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் மடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயதுக் குழந்தையொன்று தன் அழகிய சிரிப்பால் அவள் நெஞ்சைக் குழைத்தது.
அவள் குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அவளை நோக்கித் தாவியது. தாயின் மடியைவிட்டு இறங்கி அவள் பக்கத்திலிருந்த கிழவி இன்விலடாவின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு கிழவியின் முகத்தைப் பார்த்தது. கிழவி இன்விலடா தன் கழுத்திலிருந்து தொங்கும் மணிமாலையில் கோர்த்திருந்த சிறிய சிலுவை உருவத்தில் லயித்திருந்தாள்.
அவள் எப்பொழுதும் அப்படிப்பட்ட பழக்கத்தையே கைகொண்டவள் என்று பஸ்ஸில் ஏறியது முதல் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் அவள் அந்தச் சிலுவை உருவத்தில் குனிந்த பார்வையை மாற்றாமல் உட்கார்ந்திருந்தாள். அந்த வெள்ளிச் சிலுவையில் ஏசு உருவம் இருந்தது.
கிழவி குழந்தையின் மோவாயை நிமிர்த்திப் புன்முறுவலித்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் கையிலிருந்த சிலுவையைப் பிடித்திழுத்தது. சிலுவையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ''ஸ்தோத்திரம் சொல், ஆண்டவனே ! ...ஸ்தோத்திரம் சொல்லு...'' என்று இரண்டு கைகளையும் −ணைத்துக் கும்பிடக் கற்றுக் கொடுத்தாள்.
குழந்தை கும்பிட்டவாறு இளம் கன்னிகா ஸ்திரீயின் பக்கம் திரும்பி, கன்னங்கள் குழியச் சிரித்துக் கொண்டு தாவியது. அவள் குழந்தையைத் தூக்கி மார்புறத் தழுவிக் கொண்டாள். நெஞ்சில் என்னவோ சுரந்து பெருகி மூச்சை அடைப்பது போலிருந்தது. கண்கள் பனித்து அவளது இமைகளில் ஈரம் பாய்ந்தது.
"காதரின்! மணி என்ன?" - சிலுமையைப் பார்த்துக்கொண்டே கேட்டாள் இன்விலாடா, அந்தக் குழந்தையின் ஸ்பாஞ்சு போன்ற கன்னத்தில் தன் கன்னத்தைப் புதைத்துக்கொண்டு அந்த இன்பத்தில் தன்னையே மறந்திருந்த அவள் காதுகளில் கிழவியின் குரல் விழவில்லை.
"காதரின்! காதரின்!.....தூங்குறியா?......... குழந்தையைப் போட்டுடப்போறே?...மணி என்னா?"
"அம்மா!...மணி, அஞ்சு" என்று கிழவியிடம் சொல்லிவிட்டு குழந்தையை மடியைவிட்டுக் கீழே இறக்கி, "ஸ்தோத்திரம் சொல்லு, ஆண்டவனே.." என்று கொஞ்சினாள் காதரீன். குழந்தை கும்பிட்டது. அவளும் கும்பிட்டாள். அவள் பார்வை மீண்டும் எப்படியோ அந்த நாலாவது வரிசையில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபன் மீது விழுந்தது......
இந்தத் தடவை, அவள் பார்வையை மாற்றாமல் அமைதியான விழிகள் அவனை நோக்கி நிலைத்திருக்க அவனில் லயித்துவிட்டாளா என்ன?
அவனுக்கு இருபது வயசிருக்கும். நல்ல சிவப்பு நிறமும், உடல் வலிவும், கம்பீரமும் சாந்தமும் கூடிய தோற்றம். சன்னலோரத்தில் பஸ் போகும் திக்குநோக்கி அமர்ந்திருந்ததால் அவனது வெள்ளை ஷர்ட்டின் காலரோடு, அந்த நீல நிற சில்க் டையும் படபடத்துக் கழுத்தில் சுற்றியது; கிராப் சிகை கலைந்து நெற்றியில் சுருண்ட கேசம் புரண்டது. அவள் தன்னையே பார்ப்பது கண்டு அவன் உதடுகள் லோசாக இடைவெளி காட்டின. அப்பொழுது அவனது தூய வெண் பற்களின் வசீகரம் அவளையும் பதிலுக்குப் புன்முறுவல் காட்டப் பணித்தது.
காதரீன் சிரித்தபொழுது தேவமகள் போலிருந்தாள். 'உயிர்களிடமெல்லாம் கருணை காட்டவேண்டும். மனிதர்களையெல்லாம் நேசிக்க வேண்டும்' என்ற பண்பினால் ஏற்பட்ட தெய்வீகக் களை அவள் முகத்தில் அளி வீசிக்கொண்டிருந்தது.
'அவன் - அந்த மனிதன் - என்னைப்பற்றி என்ன நினைப்பான்' என்று நினைத்தாள் காதரீன். 'ஓ!.....அது என்ன பார்வை.....' காதரீனின் முகம் விசந்து உதடுகள் துடித்தன. அவளுக்கு அழுகை வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவனும் கீழுதட்டை லேசாகக் கடித்துக்கொண்டான். காதரீனின் இமைகளின் ஓரத்தில் உருண்ட வந்த இரண்டு முத்துக்கள் யாருக்கும் தெரியாமல் அவளது தலையணியில் படிந்தன. அவன் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்? இவள் ஏன் இப்படி ஆனாள் என்று நினைப்பானோ? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனத கடமையை நிறைவேற்ற முடியாது தவிக்கும் பேதை என்று நினைப்பானோ? பாபத்தைப் பற்றிச் சிந்திக்காமலிருக்கும் வல்லமையில்லாத கோழை என்று நினைப்பானோ?' அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கிழவி இன்விலடாவைப் பார்த்தாள். அவள் இந்த பிரபஞ்சத்தின் நினைவே அற்றவள் போல் கையிலிருந்த சிலுவையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் பிரார்த்திப்பது போல் உதடுகள் அசைந்து முனகிக்கொண்டிருந்தன.
காதரீனின் மனம் தன்னையும் தன் தாய் இன்விலடாவையும் ஒப்பிட்டுப் பார்த்து
'ஓ!......அவர்கள் எங்கே! நான் எங்கே!------'
இந்தப் பதினெட்டு வயசிற்குள் தான் எத்தனை தடவை பாவ மன்னிப்புக்காகப் புனிதத் தந்தையிடம் மண்டியிட்டது உண்டு என்று எண்ணிப் பார்த்தாள் காதரீன்.
"அம்மா?........"
"என்ன காதரீன்....." - சிலுவையில் முகம் குனிந்து கொண்டிருந்த இன்விலடா சுருக்கம் விழுந்த முகத்தை நிமிர்த்திக் காதரீனைப் பார்த்தாள்.
"அம்மா! நீங்கள் 'கன்பெஷன்' செய்துகொண்டதுண்டோ?........." "உம்; உண்டு மகளே! நாமெல்லாம் பாவிகள்தானே? ஆனால் நமது காவங்களை மனம் திறந்து கர்த்தரிடம் கூறிவிட்டால் நாம் ரக்ஷ¢க்கப்படுகிறோம். நமது பாவங்களையெல்லாம் கர்த்தர் சுமக்கிறார் அதனால்தானே நாம் இரவில் படுக்கச் செல்லுமுன் நமது அன்றாடப் பாவங்களைக் கடவுளிடம் ஒப்புவிக்கிறோம்? அதன் மூலம் நமது ஆத்மா பரிசுத்தப்படுகிறது. அதற்குமேலும் நம் −தயத்தை நமது பாவங்கள் உறுத்திக் கொண்டிருப்பதால்தான் நாம் புனிதத் தந்தையிடம், அவர் செவிகொடுக்கும்போது நமது பாவங்களைக் கூறி மன்னிப்புப் பெறுகிறோம். நமது தந்தை நமக்காகக் கர்த்தரை ஜபிக்கிறார். அப்படிப்பட்ட பாவங்களை நானும் செய்தது உண்டு.........." என்று கிழவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்
காதரீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'இன்விலடாவும் ஒரு பிராயத்தில் தன்னைப்போல் இருந்ததிருக்கிறார்களோ?' என்று வியந்தாள்.
"காதரீன்!...அப்போ என்க்கு உன் வயசு இருக்கும்; நான் ஒரு கனவு கண்டோன் - எனக்குக் கல்யானம் நடப்பதுபோல் ஒரு கனவு. என்ன பாவகரமான கனவு! விழித்துக்கொண்டு இரவெல்லாம் அழுதேன். கனவு காணும்போது அந்தக் கல்யாணத்தில் நான் குதூகலமாக இருப்பதுபோல் இருந்தது. அதை நினைத்தே அழுதேன். ஒரு கன்னிகா ஸ்திரீ அப்படிக் கனவு காணலாமா? மறுநாள் அந்தப் பாவத்திற்காகப் புனிதத் தந்தையிடம் மன்னிப்புப் பெற்றேன். அன்று பூராவும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து கடவுளை ஜபித்துக் கொண்டிருந்தேன்."
கிழவி குரலைத் தாழ்த்திக் காதரீனிடத்தில் மெதுவாகப் பேசினாள் "அப்புறம் ஒரு பெண்ணை வகுப்பில் அடித்து விட்டேன்.......... கன்னத்தில் ஸ்கேலால் அடித்து, சிவப்புத் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அன்று பூராவும் அதை நினைத்து நினைத்து வருந்தினேன்? அதற்காகவும் 'கன்பெஷன்' செய்து கொண்டேன். −ந்தமாதிரி ஐந்தாறு தடவை."
'இவ்வளவுதானா? இவர்கள் செய்த பாவமெல்லாம் இவ்வளவு தானா? நம்பக்கூட முடியவில்லையே!' என்று தவித்தாள் கதரீன்.
'ஒருவேளை எதையுத் மறக்கறார்களோ?' என்ற சந்தேகம் கூட வந்தது. காதரீனின் சந்தேகத்துக்குப் பதில் சொல்வதுபோல் இன்விலடா கூறினாள்
"பாவத்தை மறைப்பதுதான் சைத்தானின் வேலை. பாவத்தை மனம் திறந்து கடவுளிடம் ஒப்புவிப்போம். கடவுளிடமிருந்து எதையும் நாம் மறைக்க முடியாது."
"ஆமாம்; கடவுளிடமிருந்து நாம் எதையுமே மறைக்க முடியாது......" என்று காதரினும் தலையாட்டினாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் காதரின். அவள் பார்வை ஒருமுறை சன்னல் பக்கம், நாலாவது வரிசையில்.........
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
'ஓ! அது என்ன பார்வை!' அவள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
'ஒரு ஸ்திரியை −ச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளுடன் விபசாரஞ் செய்தவனாகிறான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்
காதரினால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை - கண்களை மீடிக் கொண்டாள். புத்தகம் திறந்திருந்தது; கண்கள் மூடி இருந்தன.....
'இதென்ன, பாப எண்ணங்கள்?' என்று மனம் புலம்பியது. இவன் ஏன் இன்னும் இறங்காமல் உட்கார்ந்திருக்கின்றான்? சாத்தானின் மறு உருவா? என்னைச் சோதிக்கிறானா இவனைப்பற்றி எனக்கென்ன கவலை?...ஓ!.....பிதாவே!'
அவள் திடீரென்று உடலில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மனசிற்குள்ளாக ஜபிக்க ஆரம்பித்தாள்: 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே!.....எங்களைச் சோதனைக்குட்பப் பண்ணாமல் தீமையினின்றும் எங்களை இரட்சித்துக்கொள்ளும்.....ஆமென்.....'
ஆனாலும் என்ன? அவள் விழிகளைத் திறந்தபோது அவனையே அவளது பார்வை சந்தித்தது.
'மனிதன் பாபத்திலிருந்து தப்பவேமுடியாதா? ஆதாமுக்காகக் கடவுள் படைத்த சுவர்க்க நந்தவனமாகிய ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமும் விலக்கப்பட்ட விருட்சமும் எப்படி உண்டாயின? கடவுள் மனிதனையும் படைத்து, பாபத்தையும் ஏன் படைத்தார்?......பாபத்தில் இன்பமிருப்பது வெறும் பிரமையா? −ன்பமே பாபமா?- உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நரகத்துக்குத்தான் போவல்களா? நான் மட்டும் ஏன் பாபங்களுக்காகப் பயப்படுகிறேன்? இதோ, இந்த அழகான வாலிபன் தன் உயிரையே கண்களில் தேக்கி என்னைப் பார்க்கிறானே!.....மனிதர்கள் எல்லாம், பெண்கள் எல்லாம் உருவத்தில் என்னைப்போல் தானே இருக்கிறார்கள்?................'
காதரின் தனக்கு நேரே இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த இளந்தம்பதிகளைப் பார்த்தாள். அவள் கர்ப்பிணி, மயக்கத்தினாலோ, ஆசையினாலோ கண்களை மூடிக்கொண்டு கணவனின் தோள்மீது சாய்ந்திருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது காதரினின் உள்மனத்தில் சைத்தானின் குரல் போல் ஓர் எண்ணம் எழுந்தது.
'அவளுக்கும் எனக்கும் பேதம் இந்த உடையில்தானே? இந்தக் கோலத்தைப் பியத்தெறிந்துவிட்டு ஓடிப்போய் அந்த இளைஞானின் தோளில் சாய்ந்து கொண்டால்?..........
'ஐயேர் பிதாவே! நான் அடுக்கடுக்காகப் பாபங்களைச் சிந்திக்கின்றேனே! என்னை ரட்சியும்.....'
பஸ் நின்றத. பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம். அந்த இரைச்சலில் பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கும் கும்பலின் பேச்சுக் குரலும் சங்கமித்தது. எல்லோரும் இறங்கும் வரை கிழவி −ன்விலடாவும் காதரினும் காத்திருந்தார்கள். கடைசியாக இருவரும் கீழிறங்கினர்.
ஜட்கா வண்டிக்காரன் ஒருவன் ஓடிவந்தான்.
"மடத்துக்குத்தானே அம்மா? வாங்க வாங்க" என்று வண்டிக்கருகே அழைத்துக்கொண்டு போனான்.
அப்பொழுது, மாலை மயங்கும் அந்தப் பொன்னொளியில் நீல நிற சூட்டும், வெள்ளை ஷர்ட்டும், நீல டையுமாகக் கையில் ஒரு சூட்கேசுடன் அவன் - அந்த இளைஞன், அழகன் - சாத்தானின் தூதுவன் போன்று நின்றிருந்தான்.
காதரினுக்குக் காதோரம் குறுகுறுத்தது. புன்முறுவல் காட்டினாள் அவனும் சிரித்தான். அவர்களை நெருங்கி வந்து முதலில் இன்விலடாவை நோக்கி, "ஸ்தோத்திரம் மதர்" என்று கை கூப்பினான்.
"ஸ்தோத்திரம் ஆண்டவனே!"என்று கிழவி கைகூப்பினாள்.
"ஸ்தோத்திரம்......" என்று காதரினை அவன் பார்க்கும் போது பதிலுக்கு வணங்கிய பாதரினின் கைகள் நடுங்கின
"ஸ்தோத்திரம்.." என்று கூறும்போது குரம் கம்மி அடைத்தது. கண்கள் நீரைப் பெருக்கின
இவர்கள் இருவரும் வண்டியில் ஏறி அமைர்ந்ததும் அவன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி ஆட்டிய வண்ணம் விடையளித்தான். அவளும் மனம் திறந்து சிரித்தவாறு கைகளை ஆட்டினாள்.....வண்டி விரைந்தது. அவன் உருவம் மறைந்தது. அவள் கைகள் துவண்டு விழுந்தன் நெஞ்சு விம்மியது.
"காதரின்! யாரது? எனக்குத் தெரியவில்லையே" என்றாள் −ன்விலடா.
"ஹ்ஹோ....." என்று கைகளை நெரித்தவாறு ஒர பொய்ச் சிரிப்புடன் காதரின் சொன்னாள்
"அம்மா! முதலில் எனக்கும் கூடத் தெரியவில்லை. என் கிளாஸில் படிக்கிறாளே −ஸபெல் - அவளோட அண்ணன்..."
"ஓ....."
"பிதாவே! என்னை ரட்சியும். எவ்வளவு பாபங்கள்! எவ்வளவு பாபங்கள்......" என்று மனசில் முனகிக்கொண்டாலும் காதரினின் கண்கள் அவன் புன்னகை பூத்த முகத்தோடு கைகளை ஆட்டி விடை பெற்றுக்கொண்ட அந்தக் காட்சியையே கண்டு களித்துக் கொண்டிருந்தன.
'அவர் யாரோ? மறுபடியும் அவரைக் காணும் அந்தப் பாக்கியம் ... பக்கியமா?... இல்லாவிட்டால் அந்தப் பாபம் - மறுபடியும் எனக்குக் கிட்டுமா?' என்று மனம் ஏங்கியது...
பாபம் செய்யக்கூடத் தனக்கு நியாயமில்லையே என்று நினைத்த பொழுது கண்கள் கலங்கின் தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை பீறிட்டது. அவள் அழ முடியுமா? அழக்கூட அவளுக்கேது நியாயம்?...
தலையணி காற்றில் பறந்து முகத்தில் விழுந்தது வசதியாய்ப் போயிற்று. அந்த நீலத் துணிக்குள் அவள் உடலும் மனமும் முகமும் பதைபதைத்து அழ, வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
கிழவி இன்விலடா கையிலிருக்கும் சிறிய சிலுவையில் ஆழ்ந்து மனசிற்குள் கர்த்தரை ஜபித்துக்கொண்டிருந்தாள்.
--------------------------------------------------------------------------------
அன்று இரவெல்லாம் காதரின் உறக்கமில்லாமல் படுக்கையில் கிடந்து தனது பாபங்களுக்காகக் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
சில நேரங்களில் அந்த இளைஞனின் முகத்தை, புன்னகையை எண்ணிப் பெருமூச்செறிந்தாள்.
பிறகு அயர்ந்து உறங்கிப்போன பின் ஒரு கனவு கண்டாள்.
கனவில்...
...ஒரு பெரிய சிலுவை, கிழவி இன்விலடா அதைத் தூக்கித் தோள் மீது சுமந்துகொண்டு நடக்கிறாள். வெகுதூரம் நடந்தபின் இன்விலடாவின் உருவம் மாதாகோயில் மாதிரி மிகப் பெரிய ஆகிருதியாகிறது. தோள்மீது சுமந்து வந்த பிரம்மாண்டமான சிலுவை அவள் உள்ளங்கையில் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே மெல்லிய புன்னகையோடு கர்த்தரை ஜபித்துக் கொண்டிருக்கிறாள் இன்விலடா...
மாதாகோயில் மணி முழங்குகிறது. வானத்திலிருந்து புனித ஒளி பாய்ந்து வந்து இன்விலடாவின் மேனியைத் தழுவுகிறது...
மாதாகோயில் மணி முழங்கிக்கொண்டிருக்கிறது...
இன்னொரு பெரிய சிலுவை. அதைத் சுமப்பதற்காகக் காதரின் வருகிறாள். குனிந்து புரட்டுகிறாள். சிலுவையை அசைக்கக்கூட அவளால் முடியவில்லை.... திணறுகிறாள்.... அவள் முதுகில் கசையாலடிப்பது போல் வேதனை... சிலுவையைப் புரட்ட முடியவில்லை....
அப்பொழுது தூரத்தில் ஒரு குரல் கேட்கிறது :
''காதரின் !... என் அன்பே ! ... காதரின்!...''
திரும்பிப் பார்க்கிறாள். அந்த இளைஞன் ஓடி வருகிறான். காதரினும் சிலுவையை விட்டுவிட்டு அவனை நோக்கித் தாவி ஓடுகிறாள். அவனது விரித்த கரங்களின் நடுவே வீழ்ந்து அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு அழுகிறாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவளது உதடுகளில் முத்தமிடுகிறான்...
ஆ ! அந்த முத்தம் ! ...
'இது பாபமா?... நான் பாபியாகவே இருக்க விரும்புகிறேன்...?' என்று அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது...
மாதாகோயில் மணி முழங்குகிறது....
விழிப்பு, கண்ணீர், குற்றம் புரிந்த உணர்ச்சி !...
தலை குனிந்துகொண்டு எல்லோருடனும் சேர்ந்து முழந்தாளிட்டுக் கர்த்தரை ஜபிக்கும்போது...
ஐயோ ! பாவம்... மனமாரக் கண்ணீர் வடிக்க முடிந்தது.
நெஞ்சில் கனக்கும் பாவச் சுமை கண்களில் வழியாகக் கண்ணீராய்க் கரைந்து வந்துவிடுமா?...
--------------------------------------------------------------------------------
அன்று புனிதத் தந்தையிடம் பாப மன்னிப்புக்காகச் சென்றாள் காதரின்.
தூய அங்கி தரித்து, கண்களில் கருணையொளி தவழ, குழந்தை போல் புன்னகை காட்டி அழைக்கும் அவரது முகத்தைப் பார்த்து அருகில் நெருங்குவதற்குக் கூசிச் சென்றாள் காதரின்.
''Kather!"
''மகளே !...'' - அவர் அவளுக்குச் செவி சாய்த்தார்.
''நான் மகாபாபி !... பெரிய பாபம் செய்துவிட்டேன் !... நான் பாபி !....''
''பாபிகளைத்தான் கடவுள் ரட்சிப்பார் மகளே !... இயேசு நீதிமான்களை அல்ல - பாபிகளையே மனம் திரும்புவதற்காக அழைக்க வந்தேன்'' என்றார் - என்று நீ படித்ததில்லையா? ...உன் பாபங்களை உன் வாயாலேயே கூறி வருந்தினால் இரட்சிப்பு ஆயத்தமாயிருக்கிறது மகளே !...''
காதரின் அவர் காதுகளில் குனிந்து உடல் பதைக்க, கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர் பெருகக் கூறினாள். வார்த்தைகள் குழைந்தன் பாதிரியார் திகைத்தார்.
அவள், ''Kather ...நான் செய்த மகாபாபம், மன்னிக்க முடியத பாபம் !... ஓ... கன்னிகாஸ்திரீயாக நான் மாறிய பாபம்...ஓஓ !...'' - அவள் விக்கி விக்கி அழுதாள். தன்னையே சிலுவையில் அறைந்ததுபோல் துடித்தாள்.
ஜெயகாந்தன்
நன்றி - ஆறாம்திணை
டிரங்க் ரோட்டில் பேரிரைச்சலோடு அந்த பஸ் போய்க் கொண்டிருந்தது. தனக்கு நேர் எதிரில் மூன்று வரிசைகளுக்கு அப்பால் நான்காவது வரிசையில் சன்னலோரமாக உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் பக்கம் தன் பார்வை திரும்பக் கூடாது என்ற சித்த உறுதியுடன், ஓடுகின்ற பஸ்ஸின் சன்னல் வழியாக, சாலையோரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் கன்னிகா ஸ்தீரியின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது.
தலையில் புல்லுக் கட்டு இடுப்பிலிருக்கும் கைக்குழந்தை அந்த விவசாயப் பெண்ணின் திறந்த மார்பில் உறங்கிக் கொண்டிருந்தது. தாயிடம் பால் குடித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கும். சாய்ந்து வீசும் மாலைவெயில் கண்ணில் படாதவாறு ஒரு கையால் குழந்தையை அணைத்துக்கொண்டு மற்றொரு கையை நெற்றிக்கு நேரே பிடித்து, சாலையில் ஓடிவரும் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பஸ் கடந்த பின்தான் இந்தக் கன்னிகா ஸ்திரீ பார்க்க முடிந்தது. அந்த இரண்டு கன்னிகா ஸ்திரீகளுமே பஸ் போகிற பக்கம் அல்லாமல் பின் புறம் நோக்கி உட்கார்ந்திருந்தனர்.
அந்த விவசாயப் பெண், குழந்தையோடு நின்றிருந்த அந்தக் காட்சி, இந்த இளம் கன்னிகா ஸ்திரீக்கு என்ன சுகத்தைத் தந்ததோ - முகத்தில் ஒரு புதிய ஒளி வீச, சன்னலுக்கு வெளியே கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். நீலநிறத் தலையணி வஸ்திரம் கன்னத்தில் படபடத்தது. தன்னை இவள் பார்ப்பதை அறிந்த விவசாயப் பெண் புன்னகை பூத்தாள். இவளும் பதிலுக்குத் தலை அசைத்தாள்...
''கருவிலாக் கருத்தரித்துக்
கன்னித் தாயாகி
உருவிலானை மனித உருவினில்
உலகுக் களித்த...''
அவள் உதடுகள் முணுமுணுத்தன. மனசில், அந்த விவசாயப் பெண்ணின் தோற்றம், தங்கள் மடத்து வாயிலில் கையில் தெய்வ குமரனை அரவணைத்து நிற்கும் புனிதமேரிச் சிலைபோல் பதிந்தது. பார்வையில் அந்த விவசாயப் பெண்ணின் உருவம் மறைய மறைய, பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் பஸ்ஸின் போக்கில் திரும்பி மீண்டும் நான்காவது வரிசையில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் முகத்தில் வந்து நின்றது.
அவன் அவளையே - அந்தக் கன்னிகா ஸ்திரீயின் வட்ட வடிவமாய், நீலமும் கறுப்பும் கலந்த அங்கிக்கு வெளியே தெரியும் முகத்தை மட்டுமே - பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. கண்கள் படபடத்தன. சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
''ஏன்? அவன் அழகாகத்தானே இருக்கிறான் ! அழகு இருந்தால்? ... அதுதான் பாபம். பாபத்தின் விளைவு - பாபமூட்டைதான் ! மனித உரு உலகில் பிறப்பதே... பிறவியே... பாவத்தின் பலன்தானே? விலக்கப்பட்ட கனியை விரும்பித் தின்னாமலிருந்தால்.... ஆதாம் ஏவாளின் சந்ததி ஏது? ஆதாமும் ஏவாளும் பிதாவால் புனிதமாகப் படைக்கப்பட்டனர்.
''ஆனால் அவர்கள்? விலக்கப்பட்ட கனியை உண்டதன் பலனாய்ப் பாபிகளானார்கள். அவர்களது பாபத்தின் விளைவாய், ''இந்த மனிதர்கள் அனைவரும்... நானும், என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்களே ... யாரோ பெற்றெடுத்து எங்கோ எறிந்துவிட்டுப்போன மூன்றுநாள் வயதான அநாதைச் சிசுவான என்னை எடுத்து மடத்தில் சேர்த்து வளர்த்துத் தன்னைப்போல் ஒரு கிறிஸ்துவ கன்னிகா ஸ்திரீயாக்கிய என் தாய் இன்விலடாவும், சற்று நேரத்துக்கு முன்பார்த்த அந்தக் கிராமத்து ஏழைத் தாயும், அவள் கையிலிருந்த சிசுவும், அதோ என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றானே அந்த இளைஞன்...அவனும், பிறந்திருக்கிறார்கள். பாவிகள்... மனிதர்கள் பாவிகள் ! விலக்கப்பட்ட விஷக்கனியில் புழுத்த புழுக்கள் ! விரியன் பாம்புகள் !....
பஸ் கடகடத்து ஓடிக்கொண்டே இருந்தது.
அவள் கண்கள் மறுபடியும் பஸ்ஸிற்குள் திரும்பும்போது அந்த வாலிபன் மீது விழுந்து, உடனே விலகி மறுபடியும் திரும்பியபோது அவள் எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் மடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயதுக் குழந்தையொன்று தன் அழகிய சிரிப்பால் அவள் நெஞ்சைக் குழைத்தது.
அவள் குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அவளை நோக்கித் தாவியது. தாயின் மடியைவிட்டு இறங்கி அவள் பக்கத்திலிருந்த கிழவி இன்விலடாவின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு கிழவியின் முகத்தைப் பார்த்தது. கிழவி இன்விலடா தன் கழுத்திலிருந்து தொங்கும் மணிமாலையில் கோர்த்திருந்த சிறிய சிலுவை உருவத்தில் லயித்திருந்தாள்.
அவள் எப்பொழுதும் அப்படிப்பட்ட பழக்கத்தையே கைகொண்டவள் என்று பஸ்ஸில் ஏறியது முதல் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் அவள் அந்தச் சிலுவை உருவத்தில் குனிந்த பார்வையை மாற்றாமல் உட்கார்ந்திருந்தாள். அந்த வெள்ளிச் சிலுவையில் ஏசு உருவம் இருந்தது.
கிழவி குழந்தையின் மோவாயை நிமிர்த்திப் புன்முறுவலித்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் கையிலிருந்த சிலுவையைப் பிடித்திழுத்தது. சிலுவையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ''ஸ்தோத்திரம் சொல், ஆண்டவனே ! ...ஸ்தோத்திரம் சொல்லு...'' என்று இரண்டு கைகளையும் −ணைத்துக் கும்பிடக் கற்றுக் கொடுத்தாள்.
குழந்தை கும்பிட்டவாறு இளம் கன்னிகா ஸ்திரீயின் பக்கம் திரும்பி, கன்னங்கள் குழியச் சிரித்துக் கொண்டு தாவியது. அவள் குழந்தையைத் தூக்கி மார்புறத் தழுவிக் கொண்டாள். நெஞ்சில் என்னவோ சுரந்து பெருகி மூச்சை அடைப்பது போலிருந்தது. கண்கள் பனித்து அவளது இமைகளில் ஈரம் பாய்ந்தது.
"காதரின்! மணி என்ன?" - சிலுமையைப் பார்த்துக்கொண்டே கேட்டாள் இன்விலாடா, அந்தக் குழந்தையின் ஸ்பாஞ்சு போன்ற கன்னத்தில் தன் கன்னத்தைப் புதைத்துக்கொண்டு அந்த இன்பத்தில் தன்னையே மறந்திருந்த அவள் காதுகளில் கிழவியின் குரல் விழவில்லை.
"காதரின்! காதரின்!.....தூங்குறியா?......... குழந்தையைப் போட்டுடப்போறே?...மணி என்னா?"
"அம்மா!...மணி, அஞ்சு" என்று கிழவியிடம் சொல்லிவிட்டு குழந்தையை மடியைவிட்டுக் கீழே இறக்கி, "ஸ்தோத்திரம் சொல்லு, ஆண்டவனே.." என்று கொஞ்சினாள் காதரீன். குழந்தை கும்பிட்டது. அவளும் கும்பிட்டாள். அவள் பார்வை மீண்டும் எப்படியோ அந்த நாலாவது வரிசையில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபன் மீது விழுந்தது......
இந்தத் தடவை, அவள் பார்வையை மாற்றாமல் அமைதியான விழிகள் அவனை நோக்கி நிலைத்திருக்க அவனில் லயித்துவிட்டாளா என்ன?
அவனுக்கு இருபது வயசிருக்கும். நல்ல சிவப்பு நிறமும், உடல் வலிவும், கம்பீரமும் சாந்தமும் கூடிய தோற்றம். சன்னலோரத்தில் பஸ் போகும் திக்குநோக்கி அமர்ந்திருந்ததால் அவனது வெள்ளை ஷர்ட்டின் காலரோடு, அந்த நீல நிற சில்க் டையும் படபடத்துக் கழுத்தில் சுற்றியது; கிராப் சிகை கலைந்து நெற்றியில் சுருண்ட கேசம் புரண்டது. அவள் தன்னையே பார்ப்பது கண்டு அவன் உதடுகள் லோசாக இடைவெளி காட்டின. அப்பொழுது அவனது தூய வெண் பற்களின் வசீகரம் அவளையும் பதிலுக்குப் புன்முறுவல் காட்டப் பணித்தது.
காதரீன் சிரித்தபொழுது தேவமகள் போலிருந்தாள். 'உயிர்களிடமெல்லாம் கருணை காட்டவேண்டும். மனிதர்களையெல்லாம் நேசிக்க வேண்டும்' என்ற பண்பினால் ஏற்பட்ட தெய்வீகக் களை அவள் முகத்தில் அளி வீசிக்கொண்டிருந்தது.
'அவன் - அந்த மனிதன் - என்னைப்பற்றி என்ன நினைப்பான்' என்று நினைத்தாள் காதரீன். 'ஓ!.....அது என்ன பார்வை.....' காதரீனின் முகம் விசந்து உதடுகள் துடித்தன. அவளுக்கு அழுகை வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவனும் கீழுதட்டை லேசாகக் கடித்துக்கொண்டான். காதரீனின் இமைகளின் ஓரத்தில் உருண்ட வந்த இரண்டு முத்துக்கள் யாருக்கும் தெரியாமல் அவளது தலையணியில் படிந்தன. அவன் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்? இவள் ஏன் இப்படி ஆனாள் என்று நினைப்பானோ? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனத கடமையை நிறைவேற்ற முடியாது தவிக்கும் பேதை என்று நினைப்பானோ? பாபத்தைப் பற்றிச் சிந்திக்காமலிருக்கும் வல்லமையில்லாத கோழை என்று நினைப்பானோ?' அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கிழவி இன்விலடாவைப் பார்த்தாள். அவள் இந்த பிரபஞ்சத்தின் நினைவே அற்றவள் போல் கையிலிருந்த சிலுவையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் பிரார்த்திப்பது போல் உதடுகள் அசைந்து முனகிக்கொண்டிருந்தன.
காதரீனின் மனம் தன்னையும் தன் தாய் இன்விலடாவையும் ஒப்பிட்டுப் பார்த்து
'ஓ!......அவர்கள் எங்கே! நான் எங்கே!------'
இந்தப் பதினெட்டு வயசிற்குள் தான் எத்தனை தடவை பாவ மன்னிப்புக்காகப் புனிதத் தந்தையிடம் மண்டியிட்டது உண்டு என்று எண்ணிப் பார்த்தாள் காதரீன்.
"அம்மா?........"
"என்ன காதரீன்....." - சிலுவையில் முகம் குனிந்து கொண்டிருந்த இன்விலடா சுருக்கம் விழுந்த முகத்தை நிமிர்த்திக் காதரீனைப் பார்த்தாள்.
"அம்மா! நீங்கள் 'கன்பெஷன்' செய்துகொண்டதுண்டோ?........." "உம்; உண்டு மகளே! நாமெல்லாம் பாவிகள்தானே? ஆனால் நமது காவங்களை மனம் திறந்து கர்த்தரிடம் கூறிவிட்டால் நாம் ரக்ஷ¢க்கப்படுகிறோம். நமது பாவங்களையெல்லாம் கர்த்தர் சுமக்கிறார் அதனால்தானே நாம் இரவில் படுக்கச் செல்லுமுன் நமது அன்றாடப் பாவங்களைக் கடவுளிடம் ஒப்புவிக்கிறோம்? அதன் மூலம் நமது ஆத்மா பரிசுத்தப்படுகிறது. அதற்குமேலும் நம் −தயத்தை நமது பாவங்கள் உறுத்திக் கொண்டிருப்பதால்தான் நாம் புனிதத் தந்தையிடம், அவர் செவிகொடுக்கும்போது நமது பாவங்களைக் கூறி மன்னிப்புப் பெறுகிறோம். நமது தந்தை நமக்காகக் கர்த்தரை ஜபிக்கிறார். அப்படிப்பட்ட பாவங்களை நானும் செய்தது உண்டு.........." என்று கிழவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்
காதரீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'இன்விலடாவும் ஒரு பிராயத்தில் தன்னைப்போல் இருந்ததிருக்கிறார்களோ?' என்று வியந்தாள்.
"காதரீன்!...அப்போ என்க்கு உன் வயசு இருக்கும்; நான் ஒரு கனவு கண்டோன் - எனக்குக் கல்யானம் நடப்பதுபோல் ஒரு கனவு. என்ன பாவகரமான கனவு! விழித்துக்கொண்டு இரவெல்லாம் அழுதேன். கனவு காணும்போது அந்தக் கல்யாணத்தில் நான் குதூகலமாக இருப்பதுபோல் இருந்தது. அதை நினைத்தே அழுதேன். ஒரு கன்னிகா ஸ்திரீ அப்படிக் கனவு காணலாமா? மறுநாள் அந்தப் பாவத்திற்காகப் புனிதத் தந்தையிடம் மன்னிப்புப் பெற்றேன். அன்று பூராவும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து கடவுளை ஜபித்துக் கொண்டிருந்தேன்."
கிழவி குரலைத் தாழ்த்திக் காதரீனிடத்தில் மெதுவாகப் பேசினாள் "அப்புறம் ஒரு பெண்ணை வகுப்பில் அடித்து விட்டேன்.......... கன்னத்தில் ஸ்கேலால் அடித்து, சிவப்புத் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அன்று பூராவும் அதை நினைத்து நினைத்து வருந்தினேன்? அதற்காகவும் 'கன்பெஷன்' செய்து கொண்டேன். −ந்தமாதிரி ஐந்தாறு தடவை."
'இவ்வளவுதானா? இவர்கள் செய்த பாவமெல்லாம் இவ்வளவு தானா? நம்பக்கூட முடியவில்லையே!' என்று தவித்தாள் கதரீன்.
'ஒருவேளை எதையுத் மறக்கறார்களோ?' என்ற சந்தேகம் கூட வந்தது. காதரீனின் சந்தேகத்துக்குப் பதில் சொல்வதுபோல் இன்விலடா கூறினாள்
"பாவத்தை மறைப்பதுதான் சைத்தானின் வேலை. பாவத்தை மனம் திறந்து கடவுளிடம் ஒப்புவிப்போம். கடவுளிடமிருந்து எதையும் நாம் மறைக்க முடியாது."
"ஆமாம்; கடவுளிடமிருந்து நாம் எதையுமே மறைக்க முடியாது......" என்று காதரினும் தலையாட்டினாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் காதரின். அவள் பார்வை ஒருமுறை சன்னல் பக்கம், நாலாவது வரிசையில்.........
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
'ஓ! அது என்ன பார்வை!' அவள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
'ஒரு ஸ்திரியை −ச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளுடன் விபசாரஞ் செய்தவனாகிறான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்
காதரினால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை - கண்களை மீடிக் கொண்டாள். புத்தகம் திறந்திருந்தது; கண்கள் மூடி இருந்தன.....
'இதென்ன, பாப எண்ணங்கள்?' என்று மனம் புலம்பியது. இவன் ஏன் இன்னும் இறங்காமல் உட்கார்ந்திருக்கின்றான்? சாத்தானின் மறு உருவா? என்னைச் சோதிக்கிறானா இவனைப்பற்றி எனக்கென்ன கவலை?...ஓ!.....பிதாவே!'
அவள் திடீரென்று உடலில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மனசிற்குள்ளாக ஜபிக்க ஆரம்பித்தாள்: 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே!.....எங்களைச் சோதனைக்குட்பப் பண்ணாமல் தீமையினின்றும் எங்களை இரட்சித்துக்கொள்ளும்.....ஆமென்.....'
ஆனாலும் என்ன? அவள் விழிகளைத் திறந்தபோது அவனையே அவளது பார்வை சந்தித்தது.
'மனிதன் பாபத்திலிருந்து தப்பவேமுடியாதா? ஆதாமுக்காகக் கடவுள் படைத்த சுவர்க்க நந்தவனமாகிய ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமும் விலக்கப்பட்ட விருட்சமும் எப்படி உண்டாயின? கடவுள் மனிதனையும் படைத்து, பாபத்தையும் ஏன் படைத்தார்?......பாபத்தில் இன்பமிருப்பது வெறும் பிரமையா? −ன்பமே பாபமா?- உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நரகத்துக்குத்தான் போவல்களா? நான் மட்டும் ஏன் பாபங்களுக்காகப் பயப்படுகிறேன்? இதோ, இந்த அழகான வாலிபன் தன் உயிரையே கண்களில் தேக்கி என்னைப் பார்க்கிறானே!.....மனிதர்கள் எல்லாம், பெண்கள் எல்லாம் உருவத்தில் என்னைப்போல் தானே இருக்கிறார்கள்?................'
காதரின் தனக்கு நேரே இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த இளந்தம்பதிகளைப் பார்த்தாள். அவள் கர்ப்பிணி, மயக்கத்தினாலோ, ஆசையினாலோ கண்களை மூடிக்கொண்டு கணவனின் தோள்மீது சாய்ந்திருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது காதரினின் உள்மனத்தில் சைத்தானின் குரல் போல் ஓர் எண்ணம் எழுந்தது.
'அவளுக்கும் எனக்கும் பேதம் இந்த உடையில்தானே? இந்தக் கோலத்தைப் பியத்தெறிந்துவிட்டு ஓடிப்போய் அந்த இளைஞானின் தோளில் சாய்ந்து கொண்டால்?..........
'ஐயேர் பிதாவே! நான் அடுக்கடுக்காகப் பாபங்களைச் சிந்திக்கின்றேனே! என்னை ரட்சியும்.....'
பஸ் நின்றத. பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம். அந்த இரைச்சலில் பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கும் கும்பலின் பேச்சுக் குரலும் சங்கமித்தது. எல்லோரும் இறங்கும் வரை கிழவி −ன்விலடாவும் காதரினும் காத்திருந்தார்கள். கடைசியாக இருவரும் கீழிறங்கினர்.
ஜட்கா வண்டிக்காரன் ஒருவன் ஓடிவந்தான்.
"மடத்துக்குத்தானே அம்மா? வாங்க வாங்க" என்று வண்டிக்கருகே அழைத்துக்கொண்டு போனான்.
அப்பொழுது, மாலை மயங்கும் அந்தப் பொன்னொளியில் நீல நிற சூட்டும், வெள்ளை ஷர்ட்டும், நீல டையுமாகக் கையில் ஒரு சூட்கேசுடன் அவன் - அந்த இளைஞன், அழகன் - சாத்தானின் தூதுவன் போன்று நின்றிருந்தான்.
காதரினுக்குக் காதோரம் குறுகுறுத்தது. புன்முறுவல் காட்டினாள் அவனும் சிரித்தான். அவர்களை நெருங்கி வந்து முதலில் இன்விலடாவை நோக்கி, "ஸ்தோத்திரம் மதர்" என்று கை கூப்பினான்.
"ஸ்தோத்திரம் ஆண்டவனே!"என்று கிழவி கைகூப்பினாள்.
"ஸ்தோத்திரம்......" என்று காதரினை அவன் பார்க்கும் போது பதிலுக்கு வணங்கிய பாதரினின் கைகள் நடுங்கின
"ஸ்தோத்திரம்.." என்று கூறும்போது குரம் கம்மி அடைத்தது. கண்கள் நீரைப் பெருக்கின
இவர்கள் இருவரும் வண்டியில் ஏறி அமைர்ந்ததும் அவன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி ஆட்டிய வண்ணம் விடையளித்தான். அவளும் மனம் திறந்து சிரித்தவாறு கைகளை ஆட்டினாள்.....வண்டி விரைந்தது. அவன் உருவம் மறைந்தது. அவள் கைகள் துவண்டு விழுந்தன் நெஞ்சு விம்மியது.
"காதரின்! யாரது? எனக்குத் தெரியவில்லையே" என்றாள் −ன்விலடா.
"ஹ்ஹோ....." என்று கைகளை நெரித்தவாறு ஒர பொய்ச் சிரிப்புடன் காதரின் சொன்னாள்
"அம்மா! முதலில் எனக்கும் கூடத் தெரியவில்லை. என் கிளாஸில் படிக்கிறாளே −ஸபெல் - அவளோட அண்ணன்..."
"ஓ....."
"பிதாவே! என்னை ரட்சியும். எவ்வளவு பாபங்கள்! எவ்வளவு பாபங்கள்......" என்று மனசில் முனகிக்கொண்டாலும் காதரினின் கண்கள் அவன் புன்னகை பூத்த முகத்தோடு கைகளை ஆட்டி விடை பெற்றுக்கொண்ட அந்தக் காட்சியையே கண்டு களித்துக் கொண்டிருந்தன.
'அவர் யாரோ? மறுபடியும் அவரைக் காணும் அந்தப் பாக்கியம் ... பக்கியமா?... இல்லாவிட்டால் அந்தப் பாபம் - மறுபடியும் எனக்குக் கிட்டுமா?' என்று மனம் ஏங்கியது...
பாபம் செய்யக்கூடத் தனக்கு நியாயமில்லையே என்று நினைத்த பொழுது கண்கள் கலங்கின் தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை பீறிட்டது. அவள் அழ முடியுமா? அழக்கூட அவளுக்கேது நியாயம்?...
தலையணி காற்றில் பறந்து முகத்தில் விழுந்தது வசதியாய்ப் போயிற்று. அந்த நீலத் துணிக்குள் அவள் உடலும் மனமும் முகமும் பதைபதைத்து அழ, வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
கிழவி இன்விலடா கையிலிருக்கும் சிறிய சிலுவையில் ஆழ்ந்து மனசிற்குள் கர்த்தரை ஜபித்துக்கொண்டிருந்தாள்.
--------------------------------------------------------------------------------
அன்று இரவெல்லாம் காதரின் உறக்கமில்லாமல் படுக்கையில் கிடந்து தனது பாபங்களுக்காகக் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
சில நேரங்களில் அந்த இளைஞனின் முகத்தை, புன்னகையை எண்ணிப் பெருமூச்செறிந்தாள்.
பிறகு அயர்ந்து உறங்கிப்போன பின் ஒரு கனவு கண்டாள்.
கனவில்...
...ஒரு பெரிய சிலுவை, கிழவி இன்விலடா அதைத் தூக்கித் தோள் மீது சுமந்துகொண்டு நடக்கிறாள். வெகுதூரம் நடந்தபின் இன்விலடாவின் உருவம் மாதாகோயில் மாதிரி மிகப் பெரிய ஆகிருதியாகிறது. தோள்மீது சுமந்து வந்த பிரம்மாண்டமான சிலுவை அவள் உள்ளங்கையில் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே மெல்லிய புன்னகையோடு கர்த்தரை ஜபித்துக் கொண்டிருக்கிறாள் இன்விலடா...
மாதாகோயில் மணி முழங்குகிறது. வானத்திலிருந்து புனித ஒளி பாய்ந்து வந்து இன்விலடாவின் மேனியைத் தழுவுகிறது...
மாதாகோயில் மணி முழங்கிக்கொண்டிருக்கிறது...
இன்னொரு பெரிய சிலுவை. அதைத் சுமப்பதற்காகக் காதரின் வருகிறாள். குனிந்து புரட்டுகிறாள். சிலுவையை அசைக்கக்கூட அவளால் முடியவில்லை.... திணறுகிறாள்.... அவள் முதுகில் கசையாலடிப்பது போல் வேதனை... சிலுவையைப் புரட்ட முடியவில்லை....
அப்பொழுது தூரத்தில் ஒரு குரல் கேட்கிறது :
''காதரின் !... என் அன்பே ! ... காதரின்!...''
திரும்பிப் பார்க்கிறாள். அந்த இளைஞன் ஓடி வருகிறான். காதரினும் சிலுவையை விட்டுவிட்டு அவனை நோக்கித் தாவி ஓடுகிறாள். அவனது விரித்த கரங்களின் நடுவே வீழ்ந்து அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு அழுகிறாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவளது உதடுகளில் முத்தமிடுகிறான்...
ஆ ! அந்த முத்தம் ! ...
'இது பாபமா?... நான் பாபியாகவே இருக்க விரும்புகிறேன்...?' என்று அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது...
மாதாகோயில் மணி முழங்குகிறது....
விழிப்பு, கண்ணீர், குற்றம் புரிந்த உணர்ச்சி !...
தலை குனிந்துகொண்டு எல்லோருடனும் சேர்ந்து முழந்தாளிட்டுக் கர்த்தரை ஜபிக்கும்போது...
ஐயோ ! பாவம்... மனமாரக் கண்ணீர் வடிக்க முடிந்தது.
நெஞ்சில் கனக்கும் பாவச் சுமை கண்களில் வழியாகக் கண்ணீராய்க் கரைந்து வந்துவிடுமா?...
--------------------------------------------------------------------------------
அன்று புனிதத் தந்தையிடம் பாப மன்னிப்புக்காகச் சென்றாள் காதரின்.
தூய அங்கி தரித்து, கண்களில் கருணையொளி தவழ, குழந்தை போல் புன்னகை காட்டி அழைக்கும் அவரது முகத்தைப் பார்த்து அருகில் நெருங்குவதற்குக் கூசிச் சென்றாள் காதரின்.
''Kather!"
''மகளே !...'' - அவர் அவளுக்குச் செவி சாய்த்தார்.
''நான் மகாபாபி !... பெரிய பாபம் செய்துவிட்டேன் !... நான் பாபி !....''
''பாபிகளைத்தான் கடவுள் ரட்சிப்பார் மகளே !... இயேசு நீதிமான்களை அல்ல - பாபிகளையே மனம் திரும்புவதற்காக அழைக்க வந்தேன்'' என்றார் - என்று நீ படித்ததில்லையா? ...உன் பாபங்களை உன் வாயாலேயே கூறி வருந்தினால் இரட்சிப்பு ஆயத்தமாயிருக்கிறது மகளே !...''
காதரின் அவர் காதுகளில் குனிந்து உடல் பதைக்க, கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர் பெருகக் கூறினாள். வார்த்தைகள் குழைந்தன் பாதிரியார் திகைத்தார்.
அவள், ''Kather ...நான் செய்த மகாபாபம், மன்னிக்க முடியத பாபம் !... ஓ... கன்னிகாஸ்திரீயாக நான் மாறிய பாபம்...ஓஓ !...'' - அவள் விக்கி விக்கி அழுதாள். தன்னையே சிலுவையில் அறைந்ததுபோல் துடித்தாள்.
ஜெயகாந்தன்
நன்றி - ஆறாம்திணை
Wednesday, February 18, 2004
ஒரு கட்டுக்கதை
அம்பை
பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.
''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.
''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.
''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.
அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.
''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.
''சரி பேசு'' என்றேன்.
''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.
''என் காதில் விழவில்லை''
''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.
ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.
''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.
''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''
''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''
மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.
''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''
''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''
கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.
''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''
வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.
அதைப்பற்றிச் சொன்னேன்.
அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.
''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.
''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.
''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''
''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''
''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''
''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''
''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''
''எனக்கு ஒரு உபகாரம் செய்''
''என்ன?''
''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''
''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''
''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''
குற்றச்சாட்டு.
சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.
அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.
பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.
சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.
''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''
நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.
நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.
''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.
''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.
''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.
அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.
''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.
''சரி பேசு'' என்றேன்.
''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.
''என் காதில் விழவில்லை''
''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.
ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.
''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.
''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''
''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''
மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.
''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''
''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''
கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.
''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''
வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.
அதைப்பற்றிச் சொன்னேன்.
அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.
''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.
''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.
''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''
''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''
''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''
''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''
''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''
''எனக்கு ஒரு உபகாரம் செய்''
''என்ன?''
''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''
''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''
''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''
குற்றச்சாட்டு.
சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.
அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.
பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.
சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.
''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''
நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.
நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
Monday, February 02, 2004
இரை
செம்பருத்தி
இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.
வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.
இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.
ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.
நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.
என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.
உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.
இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.
எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.
இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.
அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.
நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.
அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
- செம்பருத்தி -
இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.
வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.
இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.
ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.
நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.
என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.
உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.
இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.
எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.
இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.
அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.
நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.
அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
- செம்பருத்தி -
Subscribe to:
Posts (Atom)